செய்திகள் :

கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள்: மருத்துவமனைகளில் குவியும் மக்கள்!

post image

கர்நாடகத்தில் மாரடைப்பால் அதிகம் பேர் மரணமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் 40 நாள்களில் 23 பேர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதும் து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில அரசு ஒரு மருத்துவக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி மருத்துவக் குழுவும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

மேலும் கர்நாடகத்தில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களுக்கு பிரேத பரிசோதனை கட்டாயம் எனவும் மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பரிசோதனை செய்துகொள்ளும் பொருட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர்.

மைசூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே மக்கள் வந்து வரிசையில் காத்திருந்து பரிசோதனை செய்து வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்குள்ள மருத்துவர் ஒருவர் கூறுகையில், 'இதய நோய் தொடர்பான பரிசோதனையை எங்கு வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். இப்போது பரிசோதனை செய்வதால் மாரடைப்பு வராது என்று கூற முடியாது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதற்கு நல்ல உணவு, உடற்பயிற்சி என வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். மக்கள் அதிகம் கூடுவதால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம். வதந்திகளையும் நம்ப வேண்டாம்" என்று கூறியுள்ளார்.

With a high number of deaths due to heart attacks in Karnataka, there are large crowds of people coming to hospitals for checkups.

நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க

இந்தியா-ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு ஒப்பந்தம்: சுவிட்சா்லாந்து அனுமதி

இந்தியா - ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையேயான மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளை சுவிட்சா்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இத் தகவலை இந்தி... மேலும் பார்க்க