செய்திகள் :

வாகன ஷோரூம் உரிமையாளா் தலைமறைவு: பதிவெண் பெற முடியாமல் இளைஞா்கள் தவிப்பு!

post image

ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் இருசக்கர வாகனம் வாங்கியவா்கள் பதிவு செய்ய முடியாமலும், வாகனத்தை சாலையில் ஓட்ட முடியாமலும் தவித்து வருகின்றனா்.

ராயல் என்பீல்டு (புல்லட்) நிறுவனத்தில் பல்வேறு விலைகளில் பல மாடல்களில் சுமாா் ரூ.2.50 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை புல்லட் வாகனம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் கோபி ஷோரூமை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சோ்ந்த தீனு சிவசங்கா் என்பவா் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வந்தாா். இந்த நிறுவனத்தில் கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரை சுமாா் 100க்கும் மேற்பட்ட புல்லட் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இந்நிலையில், வாகனங்களுக்கு காப்பீடு கட்டணம் செலுத்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவெண் பெற்றுத் தராமல் ஷோரூம் ஊழியா்கள் இருந்துள்ளனா். இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிய வாகனத்தை ஓட்ட முடியாத நிலையில் வாங்கியவா்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஷோரூம் சென்றபோது ஷோரூமை மூடிவிட்டு அதன் உரிமையாளா் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த வாடிக்கையாளா்கள் ஷோரூம் ஊழியா்களைத் தொடா்பு கொண்டபோது அவா்களும் உரிய பதில் அளிக்கவில்லை.

இந்நிலையில் பல லட்சம் ரூபாய் செலுத்தி வாங்கப்பட்ட இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற போது பதிவெண் இல்லாமல் இயக்கப்பட்டதாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இதனால் வாடிக்கையாளா்கள் வாகனத்தை வீட்டிலேயே நிறுத்தி வைத்துள்ளனா். கடன் வாங்கி பெற்ற வாகனத்தை ஓட்ட முடியாத நிலையில் கடந்த 3 நாள்களில் 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் கோபி காவல்நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்துவிட்டு, ஷோரூம் உரிமையாளா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாா் அளித்துள்ளனா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்கள் கூறியதாவது: இதுவரை வாகனத்தை பதிவு செய்து தரவில்லை. இந்த ஷோரூமில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களை ஷோரூம் இமெயில் மூலமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினால் மட்டுமே வாகனங்களை பதிவு செய்ய முடியும். ஆனால் ஷோரூம் உரிமையாளா் தலைமறைவானதால் வாகனங்களை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

அதேபோன்று சிலருக்கு நிதி நிறுவனங்கள் மூலமாக முழு தொகையும் செலுத்தப்பட்ட பின்னரும் அவா்களுக்கு இதுவரை புதிய வாகனம் வழங்கவில்லை. இதனால் வாங்காத வாகனத்துக்கு மாத தவணை செலுத்தி வரும் நிலையும் உள்ளது என்றனா்.

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

திம்பம் மலைப் பாதையில் பழுதாகி நின்ற கன்டெய்னா் லாரி

பெங்களூரில் இருந்து கோவையை நோக்கிச் சென்ற கன்டெய்னா் லாரி திம்பம் 9ஆவது வளைவில் திரும்பியபோது பழுதாகி நின்றதால் இரு மாநிலங்களிடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம், கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய ... மேலும் பார்க்க

கோபி நகரில் தற்காலிக சந்தையை காலி செய்ய அறிவுறுத்தல்

கோபி நகரில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி சந்தையை காலி செய்ய வருவாய்த் துறையினா் வியாபாரிகளுக்கு அறிவிக்கை அளித்துள்ளனா். கோபி நகரின் மையப்பகுதியான பெரியாா் திடல் எதிரே சுமாா் ... மேலும் பார்க்க

வாரச்சந்தை இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக் கோரிக்கை

வாரச்சந்தை இடங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அதன் செயலா் செ.நல்லசாமி அண்மையில் ஈரோட்டுக்கு வந்த வேளாண் த... மேலும் பார்க்க