செய்திகள் :

வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக பிரசாரம்: காங்கிரஸ் ஆலோசனை!

post image

வாக்காளர் பட்டியல் முறைகேடு மற்றும் தேர்தல் மோசடிக்கு எதிராக தேசிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று (ஆக. 12) ஆலோசனையில் ஈடுபட்டது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், கட்சியின் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சச்சின் பைலட், கே.சி. வேணுகோபால், குமாரி செல்ஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, வாக்காளர் பட்டியல் முறைகேடுக்கு எதிராக, தேர்தல் ஆணையத்துக்கு கண்டனம் தெரிவித்து தில்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ஜந்தர் மந்தர் வரையிலும் இந்திய தேசிய மாணவர் சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணையத்தின் தரவுகளுடன் வாக்குத் திருட்டு குறித்து ஆதாரத்துடன் மத்திய அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் காந்தி எழுப்பியிருந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் உள்ள முறைகேடுகள் அந்தந்த பகுதிகளுக்கேற்ப ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

பருந்துப் பார்வையில்... மனதை மயக்கும் பெங்களூர் மெட்ரோ!

பெங்களூர் மெட்ரோ ரயிலின் மஞ்சள் வழித்தடத்தில் இரு ரயில்களும், பச்சை வழித்தடத்தில் ஒரே நேரத்தில் இரு ரயில்களும் கடந்து செல்லும் பருந்துப் பார்வை விடியோ வைரலாகி வருகிறது.ஒரே பார்வையில் நான்கு ரயில்கள் வ... மேலும் பார்க்க

குடியுரிமை பெறுவதற்கு முன்பே சோனியா வாக்காளர் ஆனது எப்படி? பாஜக கேள்வி

இந்திய குடியுரிமை பெறுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.மக்களவை தேர்தலின் போது வ... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு: பிகாரில் பாஜக தலைவர்களுக்கு 2 வாக்காளர் அட்டைகள்! - தேஜஸ்வி யாதவ்

தேர்தல் நடைபெறவுள்ள பிகாரில் பாஜக தலைவர்கள் 2 வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற தேர்தல் ஆணையம் உதவுவதாக ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் வாக்குத் தி... மேலும் பார்க்க

தயவுசெய்து உதவுங்கள்.. மோடிக்குக் கடிதம் எழுதிய பெங்களூர் சிறுமி! காரணம்?

பெங்களுர் போக்குவரத்து நெரிசல் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐந்து வயது சிறுமி எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐந்து வயத... மேலும் பார்க்க

ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்!

உத்தரப் பிரதேசத்தில் ராக்கி கட்டிய உறவுக்கார தங்கையை அவரது அண்ணன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியா பகுதியில் உள்ள தனது சித்தப்பா வ... மேலும் பார்க்க

ஜீரோ டூ ஹீரோ..! கர்ப்பிணி மனைவியை கவனித்துக்கொள்ள ரூ.1.2 கோடி வேலையை உதறித்தள்ளிய இளைஞர்!

கர்ப்பிணி மனைவிக்காக பெங்களூரு இளைஞர் ஒருவர் தன்னுடைய ரூ.1.2 கோடி ஊதியம் பெறும் வேலையை ராஜிநாமா செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவின் ஜெயநகரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தன்னுடைய... மேலும் பார்க்க