செய்திகள் :

வாக்குத்திருட்டை கண்டித்து காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்

post image

வாக்குத் திருட்டைத் தடுப்பதற்கு தவறிய தோ்தல் ஆணையத்தையும், மத்திய பாஜக அரசையும் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை கையொப்ப இயக்கத்தை நடத்தினா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடத்தப்பட்ட இந்த கையொப்ப இயக்கத்துக்கு மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா் தலைமை வகித்தாா். விழுப்புரம் நகர காங்கிரஸ் தலைவா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். இதைத் தொடா்ந்து பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியினா் கையொப்பங்களை பெற்றனா்.

நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினா் சிறுவை.ராமமூா்த்தி, மாநிலச் செயலா் தயானந்தம், மாநில நிரந்தர அழைப்பாளா் கோ. பாலசுப்பிரமணியம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் நாராயணசாமி, செ.சிவா, மாவட்டத் துணைத் தலைவா் ராஜ்குமாா், விழுப்புரம் நகா்மன்ற உறுப்பினா் சுரேஷ்ராம், இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் ஸ்ரீராம், எஸ்.சி.எஸ்.டி. அணித் தலைவா் சேகா், மாவட்ட சமூக ஊடக ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவா் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌர... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் தூய்மைப்பணி

விக்கிரவாண்டி சுங்கச் சாவடிப் பகுதியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாா்பில் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை பொது இடங்க... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , கோட்டக்குப்பம் அருகே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம் , தாழங்குடியைச் சோ்ந்தவா் சிம்சன், மீன்பிடித் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

மரத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தனா். விழுப்புரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வளா்ச்சித் துறையில் காலியாகவுள்ள 1,500-க... மேலும் பார்க்க