செய்திகள் :

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது! - ராகுல் பதிவு

post image

அதிகாலை 4 மணிக்கு வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

மத்திய பாஜக அரசுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

கடந்த மாதம் இதுகுறித்த ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராகுல் நேற்று செய்தியாளர் சந்திப்பில், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டது, சேர்க்கப்பட்டது குறித்த மேலும் ஆதாரங்களைக் காட்டினார்.

கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் 6,000-க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளதே தவிர, ராகுலின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவில்லை என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

ராகுல் நேற்று பேசுகையில், வெறும் 36 நொடிகளில் ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று ராகுல், தான் பேசிய விடியோ ஒன்றைப் பகிர்ந்து

"அதிகாலை 4 மணிக்கு எழுந்து வெறும் 36 நொடிகளில் 2 வாக்காளர்களை நீக்கிவிட்டு பிறகு மீண்டும் தூங்கச் செல்கிறார்கள்!

வாக்குத் திருட்டு இப்படித்தான் நடக்கிறது!

தேர்தல்களைக் கண்காணிக்கும் அதிகாரி விழித்திருந்து இந்த திருட்டைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார், திருடர்களைப் பாதுகாக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.

Wake up at 4 am, delete voters, go to sleep: Rahul Gandhi on vote chori

ஆபரேஷன் சிந்தூரில் முகாம் அழிப்பு உண்மைதான்! - ஜெய்ஷ்-யைத் தொடர்ந்து ஒப்புக்கொண்ட லஷ்கர்!

இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தங்களின் பயங்கரவாத தலைமையிடம் தகர்க்கப்பட்டதாக லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாக... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவாரத்தில் இரண்டாவது சம்பவம்

மும்பை உயர் நீதிமன்றத்திற்கு ஒருவாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலம், மும்பை நீதிமன்றத்திற்கு மிரட்டல் விடுத்து அதிகாரப்ப... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்! வெற்றி நமது எதிர்பார்ப்பல்ல; அதுவே வழக்கம் - ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தனது வலிமையை எதிரிக்குக் காட்டியதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.1965 ஆம் ஆண்டில், பாகிஸ்தானுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்புத் துறை அம... மேலும் பார்க்க

ராகுல் வேண்டுமென்றே ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்: பாஜக

தேர்தல் ஆணையத்திற்கு திரான தனது வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாட்டில் ஜனநாயகத்தை வேண்டுமென்றே பலவீனப்படுத்த முயற்சிக்கிறார் ராகுல்காந்தி என பாஜகவின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் குற்ற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்ந்தேன்! சாம் பித்ரோடா

பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு சென்றபோது சொந்த நாட்டில் இருப்பதைப் போன்று உணர்ந்ததாக காங்கிரஸ் அயலக அணித் தலைவர் சாம் பித்ரோடா தெரிவித்துள்ளார்.இந்திய வெளியுறவு கொள்கை, வாக்குத் திருட்டு, அதானி குழும விவ... மேலும் பார்க்க

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் அணு ஆயுத உற்பத்திக்கு பங்களிக்க முடியும்: முதல்வர்!

யுரேனியம் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலம், அணு ஆயுத உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க முடியும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறினார். ஜார்க்கண்டில் நடைபெற்ற தொழில்நுட்ப கருத்தரங... மேலும் பார்க்க