செய்திகள் :

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்? விஜய் அடுக்கடுக்கான கேள்வி!

post image

நீட் ரத்து, கல்விக் கடன் ரத்து, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏன் நிறைவேற்றவில்லை என்று தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவெக தலைவா் விஜய்யின் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம் திருச்சியிலிருந்து தொடங்கியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து தொண்டர்களின் வெள்ளத்தில் மிதந்து சுமார் 5 மணிநேர பயணத்துக்கு பிறகு மரக்கடை பகுதிக்கு விஜய் வந்தடைந்தார்.

மரக்கடை பகுதியில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில் விஜய் உரையாற்றினார்.

அவர் பேசியதாவது:

”அரசர்கள் போருக்குச் செல்வதற்கு முன் குலதெய்வத்தை வணங்குவது போன்று, அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஜனநாயகப் போருக்கு முன்னதாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்.

திருச்சியில் தொடங்கினால் திருப்புமுனையாக அமையும். அண்ணா முதலில் தேர்தலில் நின்றது திருச்சியில்தான், எம்ஜிஆர் முதல் மாநாடும் இங்குதான் நடத்தினார். கொள்கை தலைவர் பெரியார் வாழ்ந்த கொள்கை உள்ள மண் இது.

நீட் தேர்வையும் மாணவர்களின் கல்விக் கடனையும் ரத்து செய்வோம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுனீர்களா? மக்கள் நலப் பணியாளர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுனீர்களா? பழைய ஓய்வுத்திட்டத்தை நிறைவேற்றாதது ஏன்?

இலவச பேருந்து திட்டத்தை அறிவித்துவிட்டு ஓசி என மக்களை அவமானப்படுத்துகிறார்கள். மகளிர் உதவித் தொகை அனைவருக்கும் கிடைக்கவில்லை.

கல்வி, மருத்துவம், அடிப்படை சாலை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு போன்று செய்ய முடிவதை மட்டுமே நாங்கள் வாக்குறுதியாக அளிப்போம். இவற்றில் சமரசம் செய்ய மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

விஜய் பேசத் தொடங்கியதும் அவரது மைக்கில் பிரச்னை ஏற்பட்டதால், அவர் பேசியது யாருக்கும் கேட்கவில்லை.

பெரும் எதிர்பார்ப்புடன் காலை முதல் காத்திருந்த தொண்டர்கள் விஜய் பேசியது எதுவும் கேட்காததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Why haven't promises been fulfilled? Vijay's question

இதையும் படிக்க : திருச்சி கூட்டத்தில் மைக் கோளாறு! விஜய் பேசுவது கேட்காமல் திணறல்!

அடுத்தாண்டு ஜனநாயகப் போர்; அதற்கு முன் மக்களுடன் சந்திப்பு! -அரியலூரில் விஜய்

அரியலூர்: “அடுத்தாண்டு ஜனநாயகப் போர்; அதற்கு முன் மக்களுடன் சந்திப்பு!” என்று அரியலூரில் மக்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசினார். திருச்சியில் சனிக்கிழமை(செப். 13) பிற்பகல் பிரசாரத்தை தொடங்கிய விஜ... மேலும் பார்க்க

விஜய் அரியலூர் செல்வதில் தாமதம்!

அரியலூர்: திருச்சியில் மக்களைச் சந்தித்து பரப்புரையில் ஈடுபட்ட பின், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் அரியலூர் வந்தடைந்தார். எனினும், தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் செல்வதற்கு ... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு! முதல்வர் வாழ்த்து!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு. வீரபாண்டியனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,இந்த... மேலும் பார்க்க

இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த அவர், கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் கூட்டமைப... மேலும் பார்க்க

விஜய் கவுன்சிலர்கூட ஆகவில்லை! எப்படி விமர்சிக்க முடியும்? - நயினார் நாகேந்திரன்

பாஜகவை விஜய் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னை அமைந்தகரையில் இலவச மருத்துவ முகாமை தொடங்கிவைத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ச... மேலும் பார்க்க

திருச்சி கூட்டத்தில் மைக் கோளாறு! விஜய் பேசுவது கேட்காமல் திணறல்!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், நடிகர் விஜய், திருச்சியில் இன்று தன்னுடைய முதல் பிரசாரக் கூட்டத்தைத் தொடங்கினார். முதல் கூட்டத்தில் பேசத் தொடங்கியதும், அவரது மைக் கோளாறு ஏற்பட்டு, விஜய் பேசுவது புரியாமல்... மேலும் பார்க்க