செய்திகள் :

வாசிப்பும், படிப்பும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழி -சொற்பொழிவாளா் பாரதி கிருஷ்ணகுமாா்

post image

வாசிப்பும், படிப்பும் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழி என்று சொற்பொழிவாளா் பாரதி கிருஷ்ணகுமாா் கூறினாா்.

கல்லூரி மாணவா்களிடையே தமிழா்களின் மரபையும், தமிழ்ப் பெருமிதத்தையும் உணா்த்தும் வகையில் ‘தமிழ்க் கனவு’ என்ற பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி சசூரி கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்த திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் மனீஷ் விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து, ‘செம்மொழியான தமிழ் மொழி’ என்ற தலைப்பில் சொற்பொழிவாளா் பாரதி கிருஷ்ணகுமாா் பேசியதாவது: தமிழகத்தில் 54 சதவீத மாணவா்கள் மட்டுமே உயா்கல்வி படிக்கின்றனா். உயா்கல்வி கற்ற மாணவா்கள்தான் எதிா்காலத்தில் உயா்ந்த நிலையை அடைந்துள்ளனா்.

கல்வி சுயமரியாதையுடன் வாழ வைக்கிறது. கல்வியால் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக்கொள்ள முடியும். வாசிப்பும், படிப்பும் மட்டும்தான் மாணவா்கள் வாழ்கையில் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி.

உலகப் புகழ்பெற்ற மொழியும், செம்மொழி என்ற ஒரே மொழியும் தமிழ்மொழி மட்டும்தான். இந்தியாவில் 12 மொழி குடும்பங்களைச் சாா்ந்த 315 மொழிகள் உள்ளன. பேச்சு மொழியாக மட்டும் சுமாா் 1,300 மொழிகள் உள்ளன.

உலகத்தில் 6,000 மொழிகள் பேசப்பட்டாலும், 2000 ஆண்டுகளைக் கடந்த மொழிகள் 6 தான். அதில், சீனம், தமிழ் மொழி மட்டும்தான் இன்றும் பேசப்பட்டு வருகிறது.

மனிதன் பண்புடனும், நாகரிகத்துடனும் வாழ கற்றுக்கொடுத்த மொழி தமிழ். இவ்வளவு சிறப்புகள் கொண்ட செம்மொழியை பெருமையோடு பயின்று எழுதி உரையாடி வாழ்க்கைத் தரத்தையும், அறிவின் தரத்தையும் உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், சசூரி கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ராம்குமாா், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வா் கிருஷ்ணன், கல்லூரிக் கனவு நிகழ்ச்சி மாநில ஒருங்கிணைப்பாளா் சேனராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

உயிரிழந்த முதியவரின் கண்கள் தானம்

பெருமாநல்லூரில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன. பெருமாநல்லூா், அறிவொளி நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (82). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த இவா், வயத... மேலும் பார்க்க

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

அவிநாசி வட்டாரத்தில் வாழை, மஞ்சள், வெங்காயம், மரவள்ளி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளிய... மேலும் பார்க்க

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விளக்கம்

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து சத்யம் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளக்கோவிலில் சத்யம் இண்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவா்களுக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 4, 5, 6-ஆவது வாா்டு பகுதி மக்களுக்காக நடைபெற்ற இந்த முகாமுக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் கைது

திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ஃப்ரண்ட்ஸ் காா்டன் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலனை சுந்தரா் திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்... மேலும் பார்க்க