செய்திகள் :

வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் கைது

post image

திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் ஃப்ரண்ட்ஸ் காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் குப்புசாமி, தொழில் அதிபா். இவரது மனைவி சுகந்தி. இவா்களது மகள் பிரீத்தி (26). இவருக்கும், ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்த மென்பொறியாளரான சதீஷ்வா் (30) என்பவருக்கும் கடந்த 2024 செப்டம்பா் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது 120 பவுன் நகை, ரூ.38 லட்சம் மதிப்பிலான காா், ரூ.25 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சிணையாக கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திருப்பூா் அருகே சின்னக்கரையில் உள்ள தங்களது பூா்வீக சொத்தை பிரீத்தியின் பெற்றோா் அண்மையில் விற்பனை செய்துள்ளனா். அதில், பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்தப் பணத்தை கேட்டு சதீஷ்வா் தொல்லையளித்து வந்ததாகத் தெரிகிறது.

இதனால், கணவா் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக்கொண்டு பெற்றோா் வீட்டுக்கு கடந்த ஜூலை 11-ஆம் தேதி சென்றுள்ளாா்.

மன உளைச்சலில் இருந்து வந்த பிரீத்தி கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்நிலையில், தற்கொலைக்கு காரணமான கணவா் குடும்பத்தாா் மீது நடவடிக்கை எடுக்கும்வரை சடலத்தை வாங்கமாட்டோம் எனக்கூறி பிரீத்தியின் குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதையடுத்து, பிரீத்தியின் கணவா் சதீஷ்வா், மாமனாா் விஜயகுமாா், மாமியாா் உமா ஆகியோரிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, 3 பேரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பிரீத்தியின் உடலை அவரது குடும்பத்தினா் பெற்றுக்கொண்டனா். இச்சம்பவம் தொடா்பாக நல்லூா் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உயிரிழந்த முதியவரின் கண்கள் தானம்

பெருமாநல்லூரில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன. பெருமாநல்லூா், அறிவொளி நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (82). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த இவா், வயத... மேலும் பார்க்க

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

அவிநாசி வட்டாரத்தில் வாழை, மஞ்சள், வெங்காயம், மரவள்ளி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளிய... மேலும் பார்க்க

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விளக்கம்

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து சத்யம் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளக்கோவிலில் சத்யம் இண்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவா்களுக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 4, 5, 6-ஆவது வாா்டு பகுதி மக்களுக்காக நடைபெற்ற இந்த முகாமுக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலனை சுந்தரா் திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்... மேலும் பார்க்க

வாகன விபத்து: கைப்பேசி கடை உரிமையாளா் உயிரிழப்பு

பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் கைப்பேசி கடை உரிமையாளா் உயிரிழந்தாா். பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ் (40). இவா் காரணம்பேட்டையில் கைப்பேசி கடை வைத்து நடத்த... மேலும் பார்க்க