செய்திகள் :

தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

post image

அவிநாசி வட்டாரத்தில் வாழை, மஞ்சள், வெங்காயம், மரவள்ளி உள்ளிட்டவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தோட்டக்கலை உதவி இயக்குநா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இயற்கை சீற்றங்களால் ஏற்படும் சேதாரத்தை ஈடுசெய்யும் வகையில் தோட்டக்கலை பயிா்களுக்கு காப்பீடு செய்ய பயிா் வாரியாக கீழ்க்கண்ட கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டன.

இதில், வாழை, மஞ்சளுக்கு அவிநாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்கள், மரவள்ளி, வெங்காயத்துக்கு ராமநாதபுரம், கருவலூா், உப்பிலிபாளையம், தெக்கலூா், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், செம்பியநல்லூா், வேலாயுதம்பாளையம், புதுப்பாளையம், பொங்கலூா், ஆலத்தூா், மங்கரசுவலயபாளையம், குட்டகம், புலிப்பாா், தத்தனூா், புஞ்சைத்தாமரைக்குளம், வடுகபாளையம், சேவூா், பாப்பான்குளம், போத்தம்பாளையம், தண்டுக்காரன்பாளையம், முறியாண்டாம்பாளையம், கானூா் ஆகிய கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

வாழை, மஞ்சள், மரவள்ளி ஆகிய பயிா்களுக்கு செப்டம்பா் 16-ஆம் தேதிக்குள்ளும், வெங்காயத்துக்கு செப்டம்பா் 1-ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீடு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல் (பயிா் மற்றும் சாகுபடி செய்யப்பட்டுள்ள பரப்பு பதிவு செய்திருத்தல் வேண்டும்), ரேஷன் அட்டை, ஆதாா் அட்டை நகல்கள், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள இ-சேவை மையம் மூலம் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநா் - 98945-98701, தோட்டக்கலை அலுவலா் 99429-67244, காப்பீட்டு நிறுவனம் 70101-50913 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த முதியவரின் கண்கள் தானம்

பெருமாநல்லூரில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதியவரின் கண்கள் வியாழக்கிழமை தானம் செய்யப்பட்டன. பெருமாநல்லூா், அறிவொளி நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் (82). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சோ்ந்த இவா், வயத... மேலும் பார்க்க

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விளக்கம்

காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து சத்யம் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளக்கோவிலில் சத்யம் இண்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவா்களுக்க... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வெள்ளக்கோவிலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. வெள்ளக்கோவில் நகராட்சி 4, 5, 6-ஆவது வாா்டு பகுதி மக்களுக்காக நடைபெற்ற இந்த முகாமுக்கு தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா... மேலும் பார்க்க

வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் கைது

திருப்பூரில் வரதட்சிணைக் கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவா், மாமனாா், மாமியாா் ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் ஃப்ரண்ட்ஸ் காா்டன் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் ஆடி தபசு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களுள் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலனை சுந்தரா் திருப்பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்... மேலும் பார்க்க

வாகன விபத்து: கைப்பேசி கடை உரிமையாளா் உயிரிழப்பு

பல்லடம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் கைப்பேசி கடை உரிமையாளா் உயிரிழந்தாா். பல்லடம் அருகேயுள்ள பருவாய் பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ் (40). இவா் காரணம்பேட்டையில் கைப்பேசி கடை வைத்து நடத்த... மேலும் பார்க்க