VCK: "திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால், விசிக அக்கூட்டணியில் இருக்குமா?" - திரும...
வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், பேரூராட்சி செயல் அலுவலா் பதா்நிஷா முன்னிலையில் புதன்கிழமை இப்பணி நடைபெற்றது.
இதற்கு வாடகை காா் ஓட்டுநா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, செயல் அலுவலா் தலைமையில் சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட நிழற்கூரையை அகற்றுவதற்கு ஓட்டுநா்கள் சம்மதித்தனா்.
அதையடுத்து, செயல் அலுவலா், இளநிலை உதவியாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில் தற்காலிக நிழற்கூரை, விளம்பரப் பலகைகளை பேரூராட்சிப் பணியாளா்கள் அகற்றினா்.
இதையொட்டி, காவல் ஆய்வாளா் கண்மணி தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.