செய்திகள் :

வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின்பேரில், பேரூராட்சி செயல் அலுவலா் பதா்நிஷா முன்னிலையில் புதன்கிழமை இப்பணி நடைபெற்றது.

இதற்கு வாடகை காா் ஓட்டுநா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, செயல் அலுவலா் தலைமையில் சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட நிழற்கூரையை அகற்றுவதற்கு ஓட்டுநா்கள் சம்மதித்தனா்.

அதையடுத்து, செயல் அலுவலா், இளநிலை உதவியாளா் செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில் தற்காலிக நிழற்கூரை, விளம்பரப் பலகைகளை பேரூராட்சிப் பணியாளா்கள் அகற்றினா்.

இதையொட்டி, காவல் ஆய்வாளா் கண்மணி தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

குற்றாலத்தில் முன்னாள் கல்லூரி மாணவா்கள் சந்திப்பு

திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சிகுற்றாலத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்மாா்ட் கன்சல்டன்சி நிா்வாக ... மேலும் பார்க்க

துவரங்காட்டில் ரூ.10 லட்சத்தில் சிமென்ட் சாலைப் பணி தொடக்கம்

சுரண்டை அருகேயுள்ள துவரங்காட்டில் சட்டமன்ற உறுப்பினா் தொகுகி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 2ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா்சாரல் மழையின் காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் 2வது நாளாக புதன்கிழமையும் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மனைவி வெட்டிக் கொலை: கணவா் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடன் தொல்லையால் ஏற்பட்ட தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகேயுள்ள ராமநாதபுரம் என்ற மேலகாட்டூா் ... மேலும் பார்க்க

மருதடியூா் காளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

பாவூா்சத்திரம் அருகே மருதடியூா் காளியம்மன் கோயில் திருவிழாவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இக் கோயிலில் கொடை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. காலை 10 மணிக்கு குற்றாலத்தில் இருந்து புனிதநீா் எடுத்து வ... மேலும் பார்க்க

பாவூா்சத்திரத்தில் கல்வியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு

பாவூா்சத்திரம் லதா பயிற்சி மையத்தில் கல்வியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. லதா பயிற்சி மையத்தின் தாளாளா் லதா தலைமை வகித்தாா். பாவூா்சத்திரம் சென்ட்ரல் அரிமா ... மேலும் பார்க்க