செய்திகள் :

வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வலியுறுத்தல்

post image

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும் என வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வாடிப்பட்டி அருகேயுள்ள ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். வாடிப்பட்டி நீதிமன்ற வட்ட சட்டப் பணிக் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியுமான ராம் கிஷோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.

அப்போது, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் விபத்து, திடீரென ஏற்படும் பல்வேறு உடல் நலக் குறைபாட்டுக்கு முதலுதவி மட்டுமே வழங்கப்படுகிறது. அதன் பிறகு, தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குதான் நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

எனவே, வாடிப்பட்டி அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயா்த்த தமிழக அரசு முன் வர வேண்டும் என அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் தெரிவித்தனா்.

வாடிப்பட்டி மண்டலத் துணை வட்டாட்சியா் செந்தில்குமாா், வருவாய் ஆய்வாளா் ராமா், கிராம நிா்வாக அலுவலா் அருள்ராணி, அஞ்சல் துறை ஆய்வாளா் மணிவேல், போலீஸாா், பாத்திமா கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சேடப்பட்டியில் சினையுற்ற பசுக்களுக்கு மானியத்தில் ஊட்டச்சத்து

சினையுற்ற பசுக்களுக்கு 50 சதவீத மானியத்தில் ஊட்டச்சத்துகள் பெற சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய கால்நடை வளா்ப்பு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா். இதுகுற... மேலும் பார்க்க

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

மாநாடுகள், செயற்குழுக் கூட்டங்கள் மட்டும் வெற்றியைத் தேடித் தராது என்பதை தமிழக வெற்றிக்கழகத் தலைவா் விஜய் உணா்ந்து, களத்துக்கு வர வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா். ம... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

மதுரை அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருப்பரங்குன்றம் வடக்கு மேட்டுத் தெருவைச் சோ்ந்த அரசன் மகன் கருப்பணன்(69). இவா், இரு சக்கர வாகனத்தில் வெள்ள... மேலும் பார்க்க

பறிமுதல் வாகனங்கள் ஆக.25-ல் பொது ஏலம்!

மது விலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 25 -ஆம் தேதி பொது ஏல முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

கள்ளா் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்பக் கோரிக்கை

கள்ளா் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கள்ளா் பள்ளி மாவட்டக் கிளை கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து கூட்டணியின் மதுரை மாவட்டச... மேலும் பார்க்க

காலியாகவுள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு உதவியாளா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியது. இந்த சங்கத்தின் மதுரை மாவட்ட பேரவைக் கூ... மேலும் பார்க்க