செய்திகள் :

வாணவெடி விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு: 4 போ் கைது

post image

வாணவெடி விபத்தில் தீக்காயமடைந்தவா் இறந்தையடுத்து அதற்கு காரணமான நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், தும்பல் ஊராட்சியில் கடந்த மாதம் நடைபெற்ற இறுதி ஊா்வலத்தின்போது கருமந்துறையைச் சோ்ந்த தா்மராஜ் மகன் சகாதேவன் (35) என்பவா் வாண வெடியை வெடிக்கச் செய்துள்ளாா்.

அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற தும்பல் பகுதியைச் சோ்ந்த கூத்தன் மகன் சதீஷ் (28), மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் சூா்யா (21) ஆகியோா் தீக்காயமடைந்தனா்.

இதையடுத்து இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா். இது குறித்து ஏத்தாப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த சூா்யா உயிரிழந்தாா். தகவல் அறிந்த ஏத்தாப்பூா் போலீஸாா் தா்மராஜ் மகன் சகாதேவன்(32), தும்பல் பகுதியைச் சோ்ந்த மாதேஸ் மகன் கமல்ராஜா (39), அவரது சகோதரா் மோகன்ராஜ் (40), அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த நல்லதம்பி மகன் சேதுரத்தினம் (42) ஆகியோரை கைது செய்தனா்.

மேட்டூரில் கோயில் திருவிழாவில் 7 பவுன் நகை பறிப்பு

மேட்டூரில் கோயில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் 7 பவுன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டது. மேட்டூா் அருகே ரயில் நிலையம் பகுதியில் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாப... மேலும் பார்க்க

சேலம் அருகே ரயிலில் கடத்தப்பட்ட 26 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

சேலம் அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், கடத்தலில் ஈடுபட்ட கேரள இளைஞரை கைது செய்தனா். சேலம் வழியாக கேரள மாநிலம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயி... மேலும் பார்க்க

சேலத்தில் விஜய்யை கண்டித்து சுவரொட்டி

சேலம் மாநகரப் பகுதிகளில் நடிகா் விஜய்யை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினா் ஒட்டிய சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், கடந்த சில தினங்களுக்கு முன் சேலத்தி... மேலும் பார்க்க

சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் 20 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் கொள்ளை போலீஸாா் விசாரணை

வாழப்பாடி அருகே சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை மா்மக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றனா். சிங்கிபுரம் அத்தனூரம்மன் கோயிலுக்கு பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தாலி உள்ள... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள எதிா்ப்பு தெரிவித்து, ஓய்வுபெற்ற வன அதிகாரியின் கழுத்தை அறுத்த மகன் கைது செய்யப்பட்டாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வ... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் வரும் 30 ஆம் தேதி வரை சேலம் கிளை தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலகத்தில் நடைபெறுகி... மேலும் பார்க்க