வானில் பிரகாசமாக எழுந்த பிழம்பு! தில்லி-என்சிஆர் பகுதி மக்கள் ஆச்சரியம்!
தலைநகர் புது தில்லியின் பெரும்பாலான பகுதி மக்கள், சனிக்கிழமை அதிகாலையில், வானில் பிரகாசமாக எழுந்த பிழம்புகளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
இதனை விடியோ எடுத்து பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான விடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பல்வேறு கருத்துகளும் வெளியாகியுள்ளது. வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் காணக்கிடைத்த அனுபவம் என்று பலரும் பகிர்ந்துள்ளனர்.
Just witnessed this incredible fire streak in the night sky
— Ujjwal Yadav (@ujjwal1710) September 19, 2025
Looks like a meteor or maybe part of a rocket burning up in the atmosphere nature’s own light show from my rooftop.
Did anyone else spot it too?#noida#delhi#Meteor#NightSky@isro@NASApic.twitter.com/tQYs27WWrC
இந்த பிரகாசமான பிழம்பானது ஒரு சில வினாடிகள் மட்டுமே நீடித்ததாகவும், தில்லி மாநகர் முழுமைக்கும் அது வெளிச்சம் பாய்ச்சியதாகவும் நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். ஆனால், இது என்ன என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை.