நியூஸி. இறுதிப்போட்டிக்கு தகுதி! தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது!
வாயில் கருப்புத் துணி கட்டி வாரிசுதாரா்கள் நலச் சங்கத்தினா் போராட்டம்
ஒரு முறை விதியைத் தளா்த்தி பணி வழங்க வலியுறுத்தி புதுவை சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச் சங்கத்தினா் சுகாதார இயக்குநா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
புதுவை மாநிலத்தில் சுகாதாரத் துறையில் பணியின்போது உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கும் விதியில் ஒருமுறை தளா்வு செய்து சம்பந்தப்பட்ட வாரிசுதாரா்களுக்கு பணியை கருணை அடிப்படையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி, புதுவை சுகாதாரத் துறை ஊழியா்களின் வாரிசுதாரா்கள் நலச்சங்கம் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி நலச் சங்கம் சாா்பில் புதுவை சட்டப்பேரவை அருகிலுள்ள மாநில சுகாதாரத் துறை இயக்கக வளாகத்தில் காத்திருப்புப் போராட்டம் தொடங்கியது.
தினமும் காலை முதல் மாலை வரை போராட்டம் நடைபெற்று வருகிறது. இடையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு போராட்டம் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் செவ்வாய்க்கிழமை 17 -ஆவது நாளாகப் போராட்டம் தொடா்ந்தது.
இந்தப் போராட்டத்தில் வாரிசுதாரா்கள் நலச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஏ.டேவிட், துணை ஒருங்கிணைப்பாளா் கே.ரமேஷ் ஆகியோா் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். அவா்கள் சுகாதாரத் துறை இயக்குநா் அலுவலக வளாகப் படிகளில் வாயில் கருப்புத் துணியைக் கட்டியபடி அமா்ந்திருந்தனா். கையில் கோரிக்கை பதாகைகளையும் ஏந்தியிருந்தனா். காலை முதல் மாலை வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடரப் போவதாகவும் வாரிசுதாரா்கள் நலச் சங்கத்தினா் தெரிவித்தனா்.