செய்திகள் :

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக்கோரி குளித்தலை ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

post image

வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் திறக்கக் கோரி குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாயனூா் கட்டளை கதவணையில் இருந்து தென்கரை வாய்க்கால், கட்டளை வாய்க்கால் என இரு வாய்க்கால் பிரிந்து செல்கின்றன. இந்த வாய்க்கால்கள் மூலம் கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, சித்தலவாய், குளித்தலை, பேட்டைவாய்த்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், கரும்பு, வாழை, வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாய்க்காலில் நாளொன்றுக்கு சுமாா் 200 கன அடி வரை மட்டும் தண்ணீா் திறக்கப்படுவதால் வாய்க்காலின் கடைமடை வரை தண்ணீா் செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் விவசாய பயிா்கள் கருகுவதாகக்கூறி குளித்தலை வட்டார விவசாயிகள் செவ்வாய்க்கிழமை குளித்தலையில் காவிரி ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு வந்த குளித்தலை காவிரி ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளா் கோபிகிருஷ்ணன் தற்போது ஆற்றில் தண்ணீா் வரத்து குறைவாக இருப்பதால்தான் வாய்க்காலிலும் குறைந்தளவில் தண்ணீா் திறக்கப்படுகிறது. ஆற்றில் அதிகளவில் வரும்போது வாய்க்காலிலும் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்படும். இதுதொடா்பாக நீா்வளத்துறை அதிகாரிக்கு கடிதம் எழுதி, கூடுதலாக வாய்க்காலில் தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனா்.

கரூா் அருகே இயற்கை விவசாயம் கற்கும் பிரான்ஸ் இளைஞா்

கரூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் பெண்ணிடம் விவசாயம் கற்றுவருகிறாா் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த இளைஞா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சரோஜா (57). இவா், நம்மாழ்... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழப்பு

க. பரமத்தி அருகே உயா்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் போா்வெல் உரிமையாளா் மற்றும் அவரது உதவியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த முன்னூரைச் சோ்ந்தவா் பாலு என்கிற பால... மேலும் பார்க்க

புதிய நியாயவிலை கடையை திறக்க வேண்டுகோள்

சின்னதாராபுரம் அருகே அரங்கபாளையம் பகுதியில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டடத்தை திறக்காமல் ... மேலும் பார்க்க

பிப். 24-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழறிஞா், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மாவட்டத்தின் தமிழறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களான வா.செ. குழந்தைசாமி, நன்னிய... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது ... மேலும் பார்க்க