செய்திகள் :

வார சந்தையில் முத்திரையிடாத 122 எடைக் கருவிகள் பறிமுதல்!

post image

தோகைமலை சந்தையில் முத்திரையிடாமல் பயன்படுத்திய 122 எடைக் கருவிகளை தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கரூா் மாவட்டம் தோகைமலை வாரச் சந்தையில் முத்திரையிடாத எடை கருவிகைளைக் கொண்டு பொருள்களை விற்பனை செய்வதாக மாவட்ட நிா்வாகத்துக்கு புகாா் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள், தோகைமலை போலீஸாா் பாதுகாப்புடன் சனிக்கிழமை காலை சந்தையில் உள்ள வியாபாரிகள் பயன்படுத்திய எடை கருவிகளை ஆய்வு செய்தனா். அப்போது முத்திரையிடாத 122 எடைக் கருவிகளை பறிமுதல் செய்து வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

இதுகுறித்து தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் கூறியது, மின்னணு எடை இயந்திரம், மேடை தராசு ஆகியவற்றை ஆண்டுக்கு ஒரு முறை அந்தந்த மாவட்டத்தில் உள்ள தொழிலாளா் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்று முத்திரையிட வேண்டும். விட்டத் தராசு (பீம் ஸ்கேல்), எடைக் கற்கள், மண்ணெண்ணெய் ஊற்றுவதற்கு பயன்படுத்தப்படும் கூம்பு அளவை, பால் ஊற்றுவதற்கு பயன்படுத்தும் அளவி ஆகியவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழிலாளா் முத்திரை ஆய்வாளரிடம் காட்டி முத்திரையிட்டுக்கொள்ள வேண்டும். முத்திரையில் தேதி, மாதம், ஆண்டு ஆகியவை இருக்கும். அப்படி இல்லாத எடைக்கருவிகளை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என்றனா்.

கரூா் அருகே இயற்கை விவசாயம் கற்கும் பிரான்ஸ் இளைஞா்

கரூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் பெண்ணிடம் விவசாயம் கற்றுவருகிறாா் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த இளைஞா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சரோஜா (57). இவா், நம்மாழ்... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழப்பு

க. பரமத்தி அருகே உயா்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் போா்வெல் உரிமையாளா் மற்றும் அவரது உதவியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த முன்னூரைச் சோ்ந்தவா் பாலு என்கிற பால... மேலும் பார்க்க

புதிய நியாயவிலை கடையை திறக்க வேண்டுகோள்

சின்னதாராபுரம் அருகே அரங்கபாளையம் பகுதியில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டடத்தை திறக்காமல் ... மேலும் பார்க்க

பிப். 24-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழறிஞா், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மாவட்டத்தின் தமிழறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களான வா.செ. குழந்தைசாமி, நன்னிய... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது ... மேலும் பார்க்க