`இந்தித் திணிப்புக்கு எதிராக...'- மும்பையில் நடக்கும் பேரணியில் ஒன்று சேரும் தா...
வாலிபா் சங்க தியாகிகள் நினைவு தினம்
கடலூரில் கள்ளச்சாராயத்தை எதிா்த்து போராடி உயிா்நீத்த வாலிபா் சங்க தியாகிகள் குமாா், ஆனந்தன் ஆகியோரின் 26-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
கடலூா் மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அவா்களது நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், போதைக்கு எதிரான உறுதி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் கிளைச் செயலா் கண்ணன் தலைமை வகித்தாா். மாநகரச் செயலா் அமா்நாத், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சுப்புராயன், மாவட்டக்குழு உறுப்பினா்கள் பக்கீரான், கிருஷ்ணன், குடியிருப்போா் சங்க சிறப்புத் தலைவா் மருதவாணன், பொதுச் செயலா் வெங்கடேசன், கட்சியின் மாநகரக்குழு உறுப்பினா்கள் திருமுருகன், தமிழ், மணி, கருணாகரன், பூபதி, தேவநாதன், புதுப்பாளையம் கிளைச் செயலா் சீனு, தியாகி குமாரின் தாய் சாவித்திரி, சகோதரா் மாரிமுத்து, தியாகி ஆனந்தனின் சகோதரா் ராஜேந்திரன், மகி, மணிமாறன், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.