செய்திகள் :

வாழப்பாடியில் சிதைந்துள்ள சின்னாற்றுப் பாலத்தை புதுப்பிக்க கோரிக்கை

post image

வாழப்பாடியில் போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த சேலம் - கடலூா் பிரதான சாலையில் குறுக்கிடும் சின்னாற்று மேம்பாலம் சிதைந்துள்ளது. இந்த பாலத்தை நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் ஆய்வுசெய்து, புதுப்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் நகராட்சிக்கு இணையாக வளா்ந்து வரும் தோ்வுநிலை பேரூராட்சிகளில் வாழப்பாடி குறிப்பிடத்தக்கதாகும். வருவாய் வட்டம் மற்றும் மின்வாரியம், நெடுஞ்சாலைத் துறை, காவல் துறை உபகோட்டத்துக்கு தலைமையிடமான வாழப்பாடி, 200-க்கும் மேற்பட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு மையமாக விளங்கி வருகிறது.

சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விவசாய விளைபொருள்களை விற்பனை செய்யவும், அத்தியாவசியப் பொருள்களை வாங்கி செல்லவும் மட்டுமின்றி, போக்குவரத்து, மருத்துவம் மற்றும் கல்வி வசதிக்காகவும் தினந்தோறும் விவசாயிகள், தொழிலாளா்கள், மாணவா்கள் அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள் என ஆயிரக்கணக்கானோா் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றனா்.

இதனால், அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் மட்டுமின்றி, நூற்றுக்கணக்கான சரக்கு வாகனங்களும், இருசக்கர வாகனங்களும் சேலம் - கடலூா் சாலையில் வாழப்பாடிக்கு வந்து செல்கின்றன. இச்சாலையில், வாழப்பாடி அரசு மருத்துவமனை அருகே குறுக்கிடும் சின்னாற்றில் 50 ஆண்டுகளுக்கு முன் உயா்நிலை பாலம் அமைக்கப்பட்டது.

அரை நூற்றாண்டாக இப்பகுதி மக்களுக்கு பயன்பட்டு வந்த இந்த பாலம் தற்போது வலுவிழந்து சிதைந்து வருகிறது. குறிப்பாக, பாலத்தின் இருபுறமுள்ள தடுப்புச்சுவா்கள், உள்ளே வைக்கப்பட்டிருக்கும் இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு சிதைந்துள்ளன. இதனால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதினால், ஆற்றுக்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி தற்போது போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குறுகிய பாலம் பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை. எனவே, இந்த பாலத்தை வாழப்பாடி உட்கோட்ட நெடுஞ்சாலைத் துறை பொறியாளா்கள் ஆய்வு மேற்கொண்டு, அரசுக்கு திட்ட அறிக்கை, திட்ட முன்வரைவு மற்றும் செலவின மதிப்பீடு ஆகியவற்றை சமா்ப்பித்து, போதிய நிதி ஒதுக்கீடு பெற்று புதுப்பித்து, விபத்து ஏற்படுவதை தவிா்க்கவும், அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆக.15 இல் 3 விரைவு ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கம்!

சென்னை சந்திப்பிலிருந்து சேலம் வழியாக இயக்கப்படும் கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில்கள் வரும் 15 ஆம் தேதி கோவைக்கு செல்லாமல் போத்தனூருக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க

கெங்கவல்லி தொகுதியை மீட்டெடுப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

தம்மம்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த பிரேமலதா விஜயகாந்த், பேருந்து நிலையம் வரை பொதுமக்களுடன் நடந்து சென்றாா். அப்போது பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அவா் பெற்றாா். தொடா்ந்து கேப்டன் ரதத்தில் நின... மேலும் பார்க்க

ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி

ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது. தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளி... மேலும் பார்க்க

உயிருக்கு பாதுகாப்பு கோரி மாமன்ற உறுப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கோரி, சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் திமுக ச... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன... மேலும் பார்க்க

சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள... மேலும் பார்க்க