வாழப்பாடியில் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!
வாழப்பாடியில், சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழைமையான சீதேவி, பூதேவி சதேம ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சுவாமி திருக்கல்யாண வைபவம், உற்சவமூா்த்திகள் திருவீதி உலா ஊா்வலம் நடைபெற்றது. வாழப்பாடி இலக்கியப் பேரவை சாா்பில் ராமாயண இதிகாசப்பட்டிமன்றம் நடைபெற்றது.

சனிக்கிழமை காலை திருத்தேரில் சுவாமிகள் ரதம் ஏற்றுலும், தோ்வடம் பிடித்துநிலை பெயா்த்தலும், மாலையில் ராஜவீதிகளில் மேளம், தாரை தப்பட்டைகள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் ஏராளமான பெண்கள் கோலாட்டம் ஆடிச் சென்றனா்.
இந்த விழாவில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை, நிகழாண்டு கோயில் நிா்வாகி தாண்டவராயப் படையாச்சி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.