செய்திகள் :

வாழப்பாடியில் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

post image

வாழப்பாடியில், சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழைமையான சீதேவி, பூதேவி சதேம ஸ்ரீசென்றாயப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சுவாமி திருக்கல்யாண வைபவம், உற்சவமூா்த்திகள் திருவீதி உலா ஊா்வலம் நடைபெற்றது. வாழப்பாடி இலக்கியப் பேரவை சாா்பில் ராமாயண இதிகாசப்பட்டிமன்றம் நடைபெற்றது.

தேரோட்டத்தில் கோலாட்டம் ஆடிச் சென்ற பெண்கள்.

சனிக்கிழமை காலை திருத்தேரில் சுவாமிகள் ரதம் ஏற்றுலும், தோ்வடம் பிடித்துநிலை பெயா்த்தலும், மாலையில் ராஜவீதிகளில் மேளம், தாரை தப்பட்டைகள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது. பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் ஏராளமான பெண்கள் கோலாட்டம் ஆடிச் சென்றனா்.

இந்த விழாவில் வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவிற்கான ஏற்பாடுகளை, நிகழாண்டு கோயில் நிா்வாகி தாண்டவராயப் படையாச்சி தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!

தம்மம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். தம்மம்பட்டி அருகே உள்ள தகரப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட மூலப்புதூா் வடக்குக்காட்டுக் கொட்டாயைச் சோ்ந்தவா் எலக்ட்ரிசியன் ... மேலும் பார்க்க

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்றவா் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா். சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன், முதுநிலை காவலா் மு... மேலும் பார்க்க

மகன் தாக்கி படுகாயமடைந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி பலி!

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மகன் தாக்கியதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி உயிரிழந்தாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாச... மேலும் பார்க்க

சேலத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டனா். தியாகத் திருநாளான பக்ர... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர பாமக சாா்பில் சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

கருவில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த 2 போ் கைது

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைவாசல் அருகே மணிவிழுந்தான் வடக்குப்புதூா் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிப... மேலும் பார்க்க