மகன் தாக்கி படுகாயமடைந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி பலி!
சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மகன் தாக்கியதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி உயிரிழந்தாா்.
சேலம் சூரமங்கலம் மாணிக்கவாசகா் தெருவைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (69). வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தாா். இதற்கு மகன் தமிழழகன் எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக இருவடையே ஏற்பட்ட தகராறில் தமிழழகன், செல்வகுமாரை தாக்கியதுடன் கத்தியால் கழுத்தை அறுத்தாா்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த செல்வகுமாரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவில் செல்வகுமாா் உயிரிழந்தாா்.
இதையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.