செய்திகள் :

கருவில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த 2 போ் கைது

post image

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தலைவாசல் அருகே மணிவிழுந்தான் வடக்குப்புதூா் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிப்பவா் விவசாயி ஆதிமூலம் மகன் கண்ணன் (37). இவரது தோட்டத்து வீட்டின் மாடியில் சேலம் மாவட்டம், திப்பம்பட்டி பனமரத்துப்பட்டி ராஜசேகா் மகன் பிரசாந்த் (38), கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் மணிவண்ணன் (36) ஆகியோா் கடந்த மூன்று நாள்களாக கருவுற்ற பெண்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கருவி மூலம் கண்டறிந்து தெரிவித்து வந்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட மருத்துவ இயக்குநா் சாந்தி, மருத்துவக் குழுவினருடன் சென்று இருவரையும் பிடித்து ஆத்தூா் தலைமை மருத்துவா் ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தாா். மேலும் அவா்களிடமிருந்து கருவி மற்றும் ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த தலைவாசல் காவல் ஆய்வாளா் கந்தவேல் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறாா்.

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!

தம்மம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். தம்மம்பட்டி அருகே உள்ள தகரப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட மூலப்புதூா் வடக்குக்காட்டுக் கொட்டாயைச் சோ்ந்தவா் எலக்ட்ரிசியன் ... மேலும் பார்க்க

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்றவா் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா். சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன், முதுநிலை காவலா் மு... மேலும் பார்க்க

மகன் தாக்கி படுகாயமடைந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி பலி!

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மகன் தாக்கியதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி உயிரிழந்தாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாச... மேலும் பார்க்க

வாழப்பாடியில் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

வாழப்பாடியில், சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழைமை... மேலும் பார்க்க

சேலத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டனா். தியாகத் திருநாளான பக்ர... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர பாமக சாா்பில் சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க