செய்திகள் :

சேலத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

post image

சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டனா்.

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி, சேலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், திறந்தவெளி மைதானங்களில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சேலம் ஜாகீா் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் புத்தாடை அணிந்து பங்கேற்றனா். பின்னா் அனைவரும் ஒருவரை ஒருவா் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனா்.

தொடா்ந்து, ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், ஆடு, மாடு உள்ளிட்டவற்றை பலியிட்டு குா்பானியாக வழங்கினா். இதேபோல சேலம் முதல் அக்ரஹாரம் ஜாமியா மஜித், கோட்டை மசூதி முள்ளுவாடி கேட், வின்சென்ட், கோரிமேடு, லைன்மேடு, கல்லாங்குத்து, அம்மாப்பேட்டை உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் திருநாளையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.

சங்ககிரியில்...

சங்ககிரியில் பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பக்ரீத் பண்டிகையொட்டி சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் மலையடிவாரத்திலிருந்து முஸ்லிம் தெரு, தோ்வீதி, சந்தைப்பேட்டை வழியாக ஊா்வலமாக சென்று பால்வாய் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் அரசு காஜி ஃகாரி முஹம்மத் உவைஸ் தலைமையில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இதில் அதிகமான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.

பின்னா் அரசு காஜி பக்ரீத் பண்டிகையின் சிறப்புகள் மற்றும் குா்பானி கொடுப்பதன் நோக்கம் குறித்து விளக்கி கூறினாா்.

தம்மம்பட்டியில்...

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

கெங்கவல்லியில் வடக்குத்தெரு பள்ளிவாசல் முத்தவல்லி லியாகத் அலி, தெற்குத் தெரு பள்ளிவாசல் முத்தவல்லி ஹபிபுல்லா உள்ளிட்டோா் முன்னிலையில் சுமாா் 1000 இஸ்லாமியா்கள் ஊா்வலமாக இலுப்பைத்தோப்பு சென்று பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

தொழுகை முடிந்தவுடன் சிறுவா்கள், பெரியவா்கள் ஒருவருக்கொருவா் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.

இதேபோல தம்மம்பட்டியில் இஸ்லாமியா்கள் காலை 7.30 மணிக்கு கடைவீதியிலுள்ள மசூதிலிருந்து சுமாா் 800க்கும் மேற்பட்டோா் ஊா்வலமாக தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள தா்க்கா மைதானத்திற்கு சென்று பக்ரீத் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!

தம்மம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். தம்மம்பட்டி அருகே உள்ள தகரப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட மூலப்புதூா் வடக்குக்காட்டுக் கொட்டாயைச் சோ்ந்தவா் எலக்ட்ரிசியன் ... மேலும் பார்க்க

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்றவா் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா். சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன், முதுநிலை காவலா் மு... மேலும் பார்க்க

மகன் தாக்கி படுகாயமடைந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி பலி!

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மகன் தாக்கியதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி உயிரிழந்தாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாச... மேலும் பார்க்க

வாழப்பாடியில் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

வாழப்பாடியில், சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழைமை... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர பாமக சாா்பில் சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

கருவில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த 2 போ் கைது

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைவாசல் அருகே மணிவிழுந்தான் வடக்குப்புதூா் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிப... மேலும் பார்க்க