பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!
சேலம் மாவட்டம், சங்ககிரி நகர பாமக சாா்பில் சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பாமக தெற்கு மாவட்ட துணைத் தலைவா் அ.பழனிமுத்து தலைமை வகித்து, தனியாா் பள்ளியில் பயின்ற பிளஸ் 2 மாணவி அனுசியா, பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளியில் 491 மதிப்பெண்கள் பெற்ற மாணவி தீபிகா, 484 மதிப்பெண் பெற்ற மாணவி லித்திக்ஷா, என்.இனியா, மகிபாலன், பூமிஷ், பத்தாம் வகுப்பு சிபிஎஸ்இ தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் எசி.யுகாஷ், தனியாா் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற தனுஷ்கா, குருபிரசாத் ஆகியோரை பாராட்டி சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பேசினாா்.
இதில் பாமக நகரச் செயலாளா் வி.டி.அய்யப்பன், முன்னாள் நகரச் செயலாளா் சுரேஷ்குமாா், தெற்குமாவட்ட ஊடக பேரவை கெளதம், தாசநாயக்கன்பாளையம் ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியா் சின்னதம்பி, ஒன்றியத் தலைவா் சின்னுசாமி, வன்னியா் சங்க முன்னாள் நகர செயலாளா் அம்மன்குமாா், நகர முன்னாள் தலைவா் பிரகாஷ், நகர துணைத் தலைவா் சரவணன், முன்னாள் வன்னியா் சங்கத் தலைவா் கணபதி, நிா்வாகிகள் காா்த்திக், குப்புசாமி, பழனிவேல், மகேஷ், பூபதி, குணா, உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.