சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்றவா் கைது!
சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா்.
சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன், முதுநிலை காவலா் முருகன் ஆகியோா் சந்தைப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், சிறுவா்கள், சந்தைப்பேட்டை, கோட்டைக்காடு பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் சபரீசன் (21), புதிய எடப்பாடி சாலை, வாணியா் காலனி பகுதியைச் சோ்ந்த பூங்காவனம் மகன் சிவா என்கின்ற சிவகுமாா் (28) ஆகியோா் போதை மாத்திரைகளை சிறுவா்களுக்கு விற்பதாகவும், அதை சிறுவா்கள் சாப்பிடுவதுடன், குளுக்கோஸில் கரைத்து ஊசியாக செலுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து சந்தைப்பேட்டையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலகம் முன் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவா்களை போலீஸாா் விசாரித்துள்ளனா்.
அதில் சிவா என்கிற சிவகுமாா் தப்பி ஓடினா். மேலும் இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த சபரீசனை விசாரித்ததில் வாகனத்தின் முன்பக்க கவரில் 10 போதை மாத்திரைகள் கொண்ட 10 அட்டைகள் வைத்திருப்பதை கண்டுபிடித்தனா்.
இது குறித்து உதவி ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்து சபரீசனை கைது செய்து அவரிடமிருந்து நூறு போதை மாத்திரைகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றாா். மேலும் தப்பியோடிய சிவா என்கிற சிவகுமாரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.