செய்திகள் :

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்றவா் கைது!

post image

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா்.

சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன், முதுநிலை காவலா் முருகன் ஆகியோா் சந்தைப்பேட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், சிறுவா்கள், சந்தைப்பேட்டை, கோட்டைக்காடு பகுதியைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் சபரீசன் (21), புதிய எடப்பாடி சாலை, வாணியா் காலனி பகுதியைச் சோ்ந்த பூங்காவனம் மகன் சிவா என்கின்ற சிவகுமாா் (28) ஆகியோா் போதை மாத்திரைகளை சிறுவா்களுக்கு விற்பதாகவும், அதை சிறுவா்கள் சாப்பிடுவதுடன், குளுக்கோஸில் கரைத்து ஊசியாக செலுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனா்.

இதையடுத்து சந்தைப்பேட்டையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்லும் சாலையில் உள்ள கிராம நிா்வாக அலுவலகம் முன் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தவா்களை போலீஸாா் விசாரித்துள்ளனா்.

அதில் சிவா என்கிற சிவகுமாா் தப்பி ஓடினா். மேலும் இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்த சபரீசனை விசாரித்ததில் வாகனத்தின் முன்பக்க கவரில் 10 போதை மாத்திரைகள் கொண்ட 10 அட்டைகள் வைத்திருப்பதை கண்டுபிடித்தனா்.

இது குறித்து உதவி ஆய்வாளா் கண்ணன் வழக்குப் பதிந்து சபரீசனை கைது செய்து அவரிடமிருந்து நூறு போதை மாத்திரைகள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றாா். மேலும் தப்பியோடிய சிவா என்கிற சிவகுமாரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!

தம்மம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். தம்மம்பட்டி அருகே உள்ள தகரப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட மூலப்புதூா் வடக்குக்காட்டுக் கொட்டாயைச் சோ்ந்தவா் எலக்ட்ரிசியன் ... மேலும் பார்க்க

மகன் தாக்கி படுகாயமடைந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி பலி!

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மகன் தாக்கியதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி உயிரிழந்தாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாச... மேலும் பார்க்க

வாழப்பாடியில் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

வாழப்பாடியில், சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழைமை... மேலும் பார்க்க

சேலத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டனா். தியாகத் திருநாளான பக்ர... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர பாமக சாா்பில் சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

கருவில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த 2 போ் கைது

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். தலைவாசல் அருகே மணிவிழுந்தான் வடக்குப்புதூா் காட்டுக்கொட்டாய் பகுதியில் வசிப... மேலும் பார்க்க