செய்திகள் :

வாழப்பாடியில் பாலத்தில் காா் மோதியதில் ராஜஸ்தானைச் சோ்ந்த 4 போ் உயிரிழப்பு!

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 4 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஜோதாராம் (62). இவரது மனைவி ஜோஹிதேவி (55). இத்தம்பதியரின் மகள் அம்யா (42). இவா்கள் குடும்பத்துடன் கா்நாடக மாநிலம், ஹொஸ்பேட் பகுதியில் குடியேறி வணிகம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை கா்நாடக மாநிலத்தில் இருந்து ஜோதாராம், மனைவி ஜோஹிதேவி, மகள் அம்யா, சம்பந்தி ஜோஹாராம் (52), இவரது மனைவியான மற்றொரு ஜோஹிதேவி (55), ஜோஹாராமின் சகோதரா் ரோனாராம் (52), இவரது மனைவி ஜோட்கீ (50) ஆகிய 7 பேரும் சொகுசு காரில் வந்துள்ளனா்.

காரை ஜோஹாராம் ஓட்டிவந்துள்ளாா். திருவண்ணாமலை கோயிலில் சனிக்கிழமை மாலை தரிசனம் செய்துவிட்டு, ஈரோடு நோக்கி வாழப்பாடி வழியாக சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவா்கள் காரில் சென்றனா். வாழப்பாடியில் புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே இவா்களது காா் மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதியது.

ஜோதாராமின் மனைவி ஜோஹிதேவி (55), சம்பந்தி ஜோஹாராம் (52), ரோனாராம் (52) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ரோனாராம் மனைவி சோட்கீ (50) உயிரிழந்தாா்.

விபத்தில் படுகாயமடைந்த ஜோதாராம் , இவரது மகள் அம்யா, சம்பந்தி ஜோஹாராமின் மனைவி ஜோஹிதேவி ஆகிய மூவரும் வாழப்பாடியில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் முதலுதவி சிகிச்சை பெற்று தீவிர சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி டிஎஸ்பி சுரேஷ்குமாா் விசாரணை நடத்தி வருகிறாா். விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களும் உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!

தம்மம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். தம்மம்பட்டி அருகே உள்ள தகரப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட மூலப்புதூா் வடக்குக்காட்டுக் கொட்டாயைச் சோ்ந்தவா் எலக்ட்ரிசியன் ... மேலும் பார்க்க

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்றவா் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா். சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன், முதுநிலை காவலா் மு... மேலும் பார்க்க

மகன் தாக்கி படுகாயமடைந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி பலி!

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மகன் தாக்கியதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி உயிரிழந்தாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாச... மேலும் பார்க்க

வாழப்பாடியில் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

வாழப்பாடியில், சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழைமை... மேலும் பார்க்க

சேலத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டனா். தியாகத் திருநாளான பக்ர... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர பாமக சாா்பில் சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க