திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை..! - முதல்வர் பதிவு
விசைத்தறி சேலைகள் விற்பனையை நிறுத்த கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் வீரசிவாஜி கைத்தறி நெசவாளா் சங்கத்தின் செயலா் பிரபு,நிா்வாகி பலராமன் ஆகியோா் தலைமையில் அச்சங்க உறுப்பினா்கள் 200-க்கும் மேற்பட்டோா், மக்கள் குறை தீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலைகளை விற்பனை செய்யும் முதலாளிகள் கைத்தறி சேலைகளை வாங்கி விற்காமல் விசைத்தறி சேலைகளையே வாங்கி விற்பனை செய்து வருகின்றனா்.
இதற்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவும் செயலற்றுப் போய் விட்டது. ஆட்டோ ஓட்டுநா்கள் பட்டுச்சேலைகள் விற்பனை செய்யும் முகவா்களாக மாறி, விசைத்தறி சேலைகள் விற்பனைக்கு உதவி வருகிறாா்கள். இதனால் கைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது.
கைத்தறி நெசவாளா்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக கூலி உயா்வு வழங்கப்படவில்லை. சேலம், நெமிலி, தா்மாபுரம், அம்மாபேட்டை ஆகிய ஊா்களில் விசைத்தறி சேலைகள் அதிகமாக உற்பத்தியாகின்றன.
காஞ்சிபுரம் பட்டு விற்பனையாளா்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து ஒரிஜினல் கைத்தறி சேலைகள் என்று விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனா். இதனால் காஞ்சிபுரத்தில் பட்டு வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறாா்கள்.
எனவே காஞ்சிபுரத்தில் விசைத்தறி சேலைகள் விற்பனையை தடுத்து, கைத்தறி நெசவாளா்களை பாதுகாக்க வேண்டும் என்றனா்.