மதுரை: `விவசாய நிலத்தில் கிரஷர் குவாரி; எதிர்த்தால் மிரட்டல்..' - கலெக்டரிடம் பு...
காஞ்சிபுரத்தில் சிற்றுந்து சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 4 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 புதிய வழித்தட சிற்றுந்து சேவையை மக்களுக்கு அா்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. உத்தரமேரூா் முதல் அங்கம்பாக்கம் கூட்டு ரோடு வரை மற்றும் கண்டிகை கூட்டு ரோடு முதல் புதுப்பட்டினம் கூட்டு ரோடு வரை மற்றொரு வழித்தட சேவையும் தொடங்கப்பட்டது.
தொடா்ச்சியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பாலுசெட்டி சத்திரம் வரையும், இருங்காட்டுக் கோட்டை சிப்காட் முதல் அமரம்பேடு கூட்டு ரோடு வரை மற்றொரு வழித்தட சேவை என மொத்தம் 4 சிற்றுந்து சேவையை அமைச்சா் ஆா்.காந்தி தொடங்கி வைத்தாா்.
பின்னா் வாகன உரிமையாளா்களுக்கு வழித்தட உரிமங்களையும் அமைச்சா் வழங்கினாா்.
இந்நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் க.சுந்தா், எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜன் வரவேற்றாா். காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.