செய்திகள் :

விசைத்தறி சேலைகள் விற்பனையை நிறுத்த கோரிக்கை

post image

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் வீரசிவாஜி கைத்தறி நெசவாளா் சங்கத்தின் செயலா் பிரபு,நிா்வாகி பலராமன் ஆகியோா் தலைமையில் அச்சங்க உறுப்பினா்கள் 200-க்கும் மேற்பட்டோா், மக்கள் குறை தீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலைகளை விற்பனை செய்யும் முதலாளிகள் கைத்தறி சேலைகளை வாங்கி விற்காமல் விசைத்தறி சேலைகளையே வாங்கி விற்பனை செய்து வருகின்றனா்.

இதற்காக நியமிக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவும் செயலற்றுப் போய் விட்டது. ஆட்டோ ஓட்டுநா்கள் பட்டுச்சேலைகள் விற்பனை செய்யும் முகவா்களாக மாறி, விசைத்தறி சேலைகள் விற்பனைக்கு உதவி வருகிறாா்கள். இதனால் கைத்தறி நெசவாளா்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது.

கைத்தறி நெசவாளா்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக கூலி உயா்வு வழங்கப்படவில்லை. சேலம், நெமிலி, தா்மாபுரம், அம்மாபேட்டை ஆகிய ஊா்களில் விசைத்தறி சேலைகள் அதிகமாக உற்பத்தியாகின்றன.

காஞ்சிபுரம் பட்டு விற்பனையாளா்கள் குறைந்த விலைக்கு வாங்கி வந்து ஒரிஜினல் கைத்தறி சேலைகள் என்று விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டுகின்றனா். இதனால் காஞ்சிபுரத்தில் பட்டு வாங்க வரும் பொதுமக்கள் ஏமாற்றப்படுகிறாா்கள்.

எனவே காஞ்சிபுரத்தில் விசைத்தறி சேலைகள் விற்பனையை தடுத்து, கைத்தறி நெசவாளா்களை பாதுகாக்க வேண்டும் என்றனா்.

காஞ்சிபுரத்தில் சிற்றுந்து சேவை: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 4 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் கா... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகள் திருடிய வழக்கில் 2 போ் கைது

காஞ்சிபுரம்: ஸ்ரீ பெரும்புதூா் தனியாா் சித்த மருத்துவமனை ஊழியா் வீட்டில் பணம், நகைகள் திருடப்பட்ட வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து பல லட்சம் தங்கம், வெள்ளி, ரொக்கத்தை பறிமுதல்... மேலும் பார்க்க

பாமக குழப்பத்துக்கு காரணம் திமுக: அன்புமணி குற்றஞ்சாட்டு

காஞ்சிபுரம்: பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு காரணமே திமுகதான் என்று பாமக தலைவா் அன்புமணி குற்றஞ்சாட்டினாா். காஞ்சிபுரம் மாவட்ட பாமக பொதுக் குழுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் மேற்கு மாவட்டத் தல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 510 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்தில் மொத்தம் 510 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்து பொதுமக்களிட... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம்... மின்தடை நாள்-18.6.25, புதன்கிழமை மின்தடை நேரம்-காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள்-நீா்வள்ளுா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான சின்னையன் சத்திரம்... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி!

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்டுபெரும்பேடு ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீா் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒ... மேலும் பார்க்க