செய்திகள் :

விஜய் பிரசாரம்! நாகையில் மின்தடை!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரத்தை முன்னிட்டு, நாகப்பட்டினத்தில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் தவெக தலைவர் விஜய் இன்று நண்பகல் 12.30 மணியளவில் மக்களை சந்தித்துப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிலையில், விஜய்யை காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நாகப்பட்டினத்தில் குவியத் தொடங்கியுள்ளனர்.

கடந்த திருச்சி கூட்டத்தில் தவெக தொண்டர்கள் விஜய்யை காண்பதற்காக உயரமான கட்டடங்கள், மரங்கள், மின்விளக்கு கம்பங்களில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தவெக நாகை மாவட்டச் செயலாளர் சுகுமாரின் கோரிக்கையை ஏற்று, விஜய் பிரசாரம் மேற்கொள்ளவுள்ள புத்தூர் ரவுண்டானா பகுதியில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, விஜய் வருகை மற்றும் புறப்படும் போது அவரின் வாகனத்துக்கு பின்னால் தொண்டர்கள் வரக் கூடாது, உயரமான இடங்களிலும், அரசு, தனியார் கட்டடங்கள் மீதும் ஏறக் கூடாது என தவெக தரப்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Vijay campaign: Power outage in Nagapattinam

இதையும் படிக்க : எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

சொன்னார்களே, செய்தார்களா? நாகை பிரச்னைகளை பட்டியலிட்ட விஜய்!

நாகையில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், அந்த மாவட்ட மக்களின் பிரச்னைகளை பட்டியலிட்டு திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், ம... மேலும் பார்க்க

ஏன் சனிக்கிழமை மட்டும் பிரசாரம்.. சிலருக்கு ஓய்வு கொடுக்கவே: விஜய் பேச்சு - விடியோ

நாகை: ஏன் சனிக்கிழமைகளில் மட்டும் பிரசாரம் செய்கிறேன் என்றால், உங்களுக்கு தொந்தரவு கூடாது என்பதற்காகவே வாரயிறுதி நாள்களில் பிரசாரம் மேற்கொள்கிறேன், சிலருக்கு ஓய்வு கொடுக்கவே, ஓய்வு நாள்களில் பிரசாரம் ... மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா? - முதல்வரை விமர்சித்த விஜய்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது குறித்து தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிர... மேலும் பார்க்க

மிரட்டிப் பார்க்கிறீர்களா? பூச்சாண்டி வேலை வேண்டாம்: விஜய்

நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொண்டு உரையாற்றத் தொடங்கிய விஜய், நாகைக்கு 14 ஆண்டுகளுக்கு முன்பே நான் வந்தேன். மீனவர்கள் பாதுகாப்பு முக்கியம் என்று விஜய் பேசினார்.அவர் தொடர்ந்து பேசுகையில்,இலங்கைக... மேலும் பார்க்க

தமிழில் 100 மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்! - அன்பில் மகேஸ்

பொதுத் தேர்வில் தமிழில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார். சென்னையில் பள்ளிக் கல்வித் துறை சார்பி... மேலும் பார்க்க

காவிரி கடைமடையில் தவெக தலைவர் விஜய்! சற்று நேரத்தில் பிரசாரம்

நாகை: தவெக தலைவர் விஜய், நாகையில் இன்று தனது பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார். காவிரி கடைமடைப் பகுதியில் விஜய் இன்னும் சற்று நேரத்தில் உரையாற்ற விருக்கிறார். விஜய் நாகையில் பிரசாரம் செய்ய காவல்துறை அன... மேலும் பார்க்க