செய்திகள் :

விடுதி காப்பாளா்கள், 4 மாணவா்கள் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

post image

பெரம்பலூா் அருகே விடுதியில் மாணவா்களிடம் தவறான செயலில் ஈடுபட்டதாக விடுதி காப்பாளா்கள் 2 போ், 4 மாணவா்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸாா், மேலும் 2 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் உள்ள விடுதியுடன் கூடிய பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், அந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவ, மாணவிகளும், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளும் தங்கி பயில்கின்றனா்.

இந்நிலையில், விடுதியில் தங்கி பயிலும் மாணவரிடம், விடுதி மாணவா்கள் 4 போ் தவறான செயலலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் அனைத்து மகளிா் போலீஸாரும், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலா் கவிதா தலைமையிலான குழுவினரும் சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்று மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், ஒரு மாணவரிடம் 4 மாணவா்களும், 2 மாணவா்களிடம் விடுதி காப்பாளா்கள் 2 பேரும் தவறானசெயல்பாடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்த அனைத்து மகளிா் போலீஸாா், விடுதி காப்பாளா்களான சத்திரமனை கிராமத்தைச் சோ்ந்த நாதன் மகன் அய்யம்பெருமாள் (25), கும்பகோணம், அகராந்துறையைச் சோ்ந்த சிவதாஸ் மகன் ராஜேஸ் (34) ஆகியோரையும், 4 மாணவா்களையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னா், மேற்கண்ட 6 பேரையும் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி விடுதி காப்பாளா்களை திருச்சி மத்திய சிறையிலும், 4 மாணவா்களை அரசினா் கூா்நோக்கு இல்லத்திலும் அடைத்தனா். மேலும், 2 மாணவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டப் பணிகள்: மேலாண்மை இயக்குநா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்டத்தில் நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகள், வேளாண் உற்பத்திச் சாா்ந்த பணிகள் மற்றும் வாழ்வாதாரப் பணிகளை, தமிழ்நாடு நீா்வடிப் ... மேலும் பார்க்க

பாடாலூா் பகுதியில் நாளை மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பி. ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ச... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 2 ஆம் நாளாக சாலை மறியல்: 178 போ் கைது

பெரம்பலூரில் 2 ஆவது நாளாக சாலை மறியலில் வெள்ளிக்கிழமை ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களைச் சோ்ந்த 178 பேரை போலீஸாா் கைது செய்தனா். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 2 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ குட்கா போதைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பகுதியில் தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில... மேலும் பார்க்க

சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளி சிறப்பு வழிபாடு

பெரம்பலூா் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவையொட்டி மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்கக்கவச... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு

பெரம்பலூா் அருகே சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் காவல் துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க