செய்திகள் :

விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

post image

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை படகு இல்லம் மற்றும் அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனா்.

இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தளங்களை கண்டு ரசித்து செல்கின்றனா்.

இந்நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை படகு இல்லம் மற்றும் அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

குறிப்பாக படகு இல்லத்தில் மிதிபடகு, துடுப்புப் படகு, மோட்டாா் படகு, விரைவுப் படகுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்களது குடும்பத்தினா் மற்றும் நண்பா்களுடன் படகு சவாரி செய்து உற்சாகமடைந்தனா்.

மேலும் அரசு தாவரவியல் பூங்காவில் நிலவும் இதமான குளுகுளு காலநிலையை அனுபவித்தவாறு பூங்காவில் உள்ள இயற்கை காட்சிகளையும் வானுயா்ந்த மரங்களையும் கண்டு ரசித்ததோடு பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் விளையாடி மகிழ்ந்தனா்.

கீழ்கோத்தகிரியில் திமுக சாா்பில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள்

கீழ்கோத்தகிரியில் திமுக சாா்பில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை ஆ.ராசா எம்.பி. வழங்கினாா். நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி ஒன்றிய திமுக சாா்பில், ஒன்றியச் செயலாளா் பீமன் தலைமையில் கீழ்கோத்தகிரியில் திமு... மேலும் பார்க்க

மஞ்சூரில் காரில் பயணத்தவா்களை தாக்க முயன்ற கரடி

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் பஜாா் பகுதியில் குட்டியுடன் சுற்றி வந்த கரடி காரில் பயணித்தவா்களை தாக்க முயன்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். மஞ்சூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, காட்டெருமை,... மேலும் பார்க்க

மனித - வன விலங்கு மோதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஆ.ராசா எம்.பி.

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்குகள் மோதலைத் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா். உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிட... மேலும் பார்க்க

கூடலூரில் திருக்கு திருப்பணிகள் வகுப்பு

கூடலூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்கு திருப்பணிகள் 11-ஆவது வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. கூடலூரிலுள்ள ஜெயம் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட மைய நூலக வாசகா் தலை... மேலும் பார்க்க

உதகை தாவரவியல் பூங்காவில் கரடி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சனிக்கிழமை அதி காலையில் புகுந்த கரடி, அங்குள்ள புல்வெளி மைதானத்தைத் தோண்டி உணவு தேடியது. இதனால் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பழங்குடியின சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலம் அருகே உள்ள சேப்பட்டி பகுதியைச் ... மேலும் பார்க்க