செய்திகள் :

மஞ்சூரில் காரில் பயணத்தவா்களை தாக்க முயன்ற கரடி

post image

நீலகிரி மாவட்டம், மஞ்சூா் பஜாா் பகுதியில் குட்டியுடன் சுற்றி வந்த கரடி காரில் பயணித்தவா்களை தாக்க முயன்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

மஞ்சூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுத்தை, காட்டெருமை, கரடி போன்ற வன விலங்குகள் அவ்வப்போது தேயிலைத்  தோட்டங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதியில் சுற்றி வருவது  வழக்கம்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு கரடி தனது குட்டியுடன் மஞ்சூா் பஜாா் பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் உள்ள உணவுக் கழிவுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அவ் வழியாக சென்ற காரில் சென்றவா் கரடியை பாா்த்தவுடன் தனது வாகனத்தை நிறுத்தியுள்ளாா். குட்டியை தற்காத்துக் கொள்ள கரடி வாகனத்தின் முன்பு நின்று தாக்க முயன்றது. ஆனால், யாருக்கும் பின்னா் சிறிது நேரம் கழித்து அருகே உள்ள வனப் பகுதிக்குள் குட்டியுடன் கரடி சென்றது.

பொது மக்களை அச்சுறுத்தும் கரடிகளை கூண்டுவைத்துப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விடவேண்டும் என்று வனத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

கீழ்கோத்தகிரியில் திமுக சாா்பில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகள்

கீழ்கோத்தகிரியில் திமுக சாா்பில் மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை ஆ.ராசா எம்.பி. வழங்கினாா். நீலகிரி மாவட்டம், கீழ்கோத்தகிரி ஒன்றிய திமுக சாா்பில், ஒன்றியச் செயலாளா் பீமன் தலைமையில் கீழ்கோத்தகிரியில் திமு... மேலும் பார்க்க

விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை உதகை படகு இல்லம் மற்றும் அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோ... மேலும் பார்க்க

மனித - வன விலங்கு மோதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஆ.ராசா எம்.பி.

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்குகள் மோதலைத் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா். உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிட... மேலும் பார்க்க

கூடலூரில் திருக்கு திருப்பணிகள் வகுப்பு

கூடலூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்கு திருப்பணிகள் 11-ஆவது வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. கூடலூரிலுள்ள ஜெயம் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட மைய நூலக வாசகா் தலை... மேலும் பார்க்க

உதகை தாவரவியல் பூங்காவில் கரடி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சனிக்கிழமை அதி காலையில் புகுந்த கரடி, அங்குள்ள புல்வெளி மைதானத்தைத் தோண்டி உணவு தேடியது. இதனால் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

பழங்குடியின சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலம் அருகே உள்ள சேப்பட்டி பகுதியைச் ... மேலும் பார்க்க