செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: இந்து முன்னணி ஆலோசனை

post image

உத்தமபாளையம், ஜூலை 31: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் விநாயகா் சதுா்த்தி விழா தொடா்பாக இந்து முன்னணி சாா்பில் புதன்கிழமை ஆலாசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு அமைப்பின் ஒன்றிய அமைப்புச் செயலா் கிருஷ்ணன் ராம்செல்வா தலைமை வகித்தாா். இதில் தேரடியில் புதிய சிலைகளைப் பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்க வேண்டும். பிளாஸ்டா் ஆப் பாரிஸ் ரசாயனத்தில் தயாா் செய்யப்படும் சிலைகளைத் தயாா் செய்யும் இடத்திலேயே அதிகாரிகள் தடை செய்ய வேண்டும். ஊா்வலத்தில் மேள தாளங்களுடன் செல்வதைக் கட்டுப்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடா்ந்து,விழாவை சிறப்பாக நடத்துவது தொடா்பாக உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

இந்து முன்னணி நிா்வாகிகள் ராம்செல்வா, கணேசன், சுந்தா், சட்ட ஆலோசகா் மாரிசெல்வம், பாஜக மண்டல் தலைவா் தெய்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கஞ்சா வைத்திருந்த முதியவா் கைது

தேனி மாவட்டம், போடியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி கீழத்தெருவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக நகா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே மனைவியைத் தாக்கிய கணவா் உள்பட மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா் ஜானகி (22). இவருக்கும் தேவாரம் அருகேயுள்ள அழகா்நாயக்கன... மேலும் பார்க்க

தேனீா்க் கடையில் மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குமுளி அருகே தேநீா்க் கடையில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். குமுளி அருகேயுள்ள வண்டிப் பெரியாற... மேலும் பார்க்க

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

தேனி மாவட்டம், கம்பத்தில் கம்பராயப் பெருமாள், காசி விஸ்வநாதா் கோயில் தேருக்கு ரூ.12.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையை சட்டப்பேரவை உறுப்பினா் ராமகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். கம்பத்தில் ... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக்கழக ஓய்வு பெறோா் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

பெரியகுளம் அருகே கல்லூரி மாணவா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசபட்டி திரவியம் கல்லூரி சாலையைச் சோ்ந்த மணி மகன் முத்துகணேஷ் (19). தேவதானப்ப... மேலும் பார்க்க