செய்திகள் :

வினா-விடை வங்கி... சந்திப்பிழை

post image

சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக

1.

அ) மருத்துவப் படிப்பிற்கு என்னை தேர்வு செய்தனர்.

ஆ) மருத்துவ படிப்பிற்கு என்னை தேர்வு செய்தனர்.

இ) மருத்துவப் படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்.

ஈ) மருத்துவ படிப்பிற்கு என்னைத் தேர்வு செய்தனர்.

2.

அ) விடையை தேடிப்பார்க்க கடினமாக இருந்தது.

ஆ) விடையை தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது.

இ) விடையைத் தேடிப்பார்க்க கடினமாக இருந்தது.

ஈ) விடையைத் தேடிப்பார்க்கக் கடினமாக இருந்தது.

3.

அ) தென்னிந்தியாவின் அடையாள சின்னமாக காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.

ஆ) தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாக காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.

இ) தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.

ஈ) தென்னிந்தியாவின் அடையாள சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.

4.

அ) சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆ) சங்க இலக்கியமான கலிதொகையில் ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

இ) சங்க இலக்கியமான கலிதொகையில் ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஈ) சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

5.

அ) அகத்திக்கீரையைப் பறித்தேன்.

ஆ) அகத்திகீரையைப் பறித்தேன்.

இ) அகத்திக்கீரையை பறித்தேன்.

ஈ) அகத்திகீரையை பறித்தேன்.

6.

அ) சிற்பக் கலையைப் போற்றிப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

ஆ) சிற்பக் கலையை போற்றிப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

இ) சிற்பக் கலையைப் போற்றி பாதுகாப்பது நமது கடமையாகும்.

ஈ) சிற்ப கலையைப் போற்றிப் பாதுகாப்பது நமது கடமையாகும்.

7.

அ) பத்திரிக்கை

ஆ) வாழ்த்துகள்

இ வாழ்கத்தமிழ்

ஈ) திருவளர்ச்செல்வன்

8.

அ) தந்தையை பாருங்கள்

ஆ) வந்த்ச்சிரிப்பு

இ) பார்த்தப் பையன்

ஈ) எவைத் தவறுகள்

9.

அ) தீபிடித்தது

ஆ) தனி சிறப்பு

இ) பூ பந்தல்

ஈ) மிகப் பெரியவர்

10.

அ) அச்சட்டை

ஆ) இந்த காலம்

இ) என கேட்பார்

ஈ) வருவதாக கூறு

11.

அ) நிலா சோறு

ஆ) கனா கண்டேன்

இ) வாழ்க்கைப் படகு

ஈ) உலக பந்து

கீழ்கண்டவற்றுள் எது சரி

12.

1) முதியவருக்குப் பணம் கொடு.

2) கதவைத் திற.

அ) 1, 2 சரி

ஆ) 1,2 தவறு

இ) 1 சரி, 2 தவறு

ஈ) 1 தவறு, 2 சரி

13.

1) எனக் கேட்டார்.

2) வருவதாக கூறு

அ) 1,2 தவறு

ஆ) 1 சரி, 2 தவறு

இ) 1 தவறு, 2 சரி

ஈ) 1, 2 சரி

14.

1) எட்டுத்தொகை

2) பத்துப்பாட்டு

அ) 1,2 தவறு

ஆ) 1 சரி, 2 தவறு

இ) 1, 2 சரி

ஈ) 1 தவறு, 2 சரி

15.

1) பெட்டிச்செய்தி

2) விழாகுழு

அ) 1, 2 சரி

ஆ) 1,2 தவறு

இ) 1 சரி, 2 தவறு

ஈ) 1 தவறு, 2 சரி

16.

1) கிடுகிடுக்கும் இடிமுழக்கம்

2) வானைப் பிளந்தன

அ) 1,2 தவறு

ஆ) 1 சரி, 2 தவறு

இ) 1 தவறு, 2 சரி

ஈ) 1, 2 சரி

17.

1) ஐந்தாம் வகுப்பு வரைதான்

2) கல்வி பயிலும் வாய்ப்புக்கிட்டியது.

அ) 1, 2 சரி

ஆ) 1,2 தவறு

இ) 1 சரி, 2 தவறு

ஈ) 1 தவறு, 2 சரி

18. 1) குதிரை தாண்டியது

2) கிளி பேசும்

அ) 1, 2 சரி

ஆ) 1,2 தவறு

இ) 1 சரி, 2 தவறு

ஈ) 1 தவறு, 2 சரி

19. 1) வந்த சிரிப்பு

2) 2) வாழ்க தமிழ்

அ) 1, 2 சரி

ஆ) 1,2 தவறு

இ) 1 சரி, 2 தவறு

ஈ) 1 தவறு, 2 சரி

20.

அ) அவ்வாறுப் பேசினான்

ஆ) அத்தனைச் சிறியது

இஅத்தகையப் பாடல்கள்

ஈ) அப்படிப்பட்ட காட்சி

கோடிட்ட இடத்தை நிரப்புக

21) மிக என்னும் சொல்லின்பின் வல்லினம்................

அ) மிகும்

ஆ) மிகாது

இ) சில இடங்களில் மிகும்

ஈ) சில இடங்களில் மிகாது

22. உவமைத்தொகையில் வல்லினம்...........

அ) மிகும்

ஆ) மிகாது

இ) சில இடங்களில் மிகும்

ஈ) சில இடங்களில் மிகாது

23..................வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்.

அ)7

ஆ)5

இ)4

ஈ) 6

24.

விளித்தொடர்களில் வல்லினம்..........

அ) மிகாது

ஆ) சில இடங்களில் மிகும்

இ) சில இடங்களில் மிகாது

ஈ) மிகும்

25.

பெயரெச்சத்தில் வல்லினம்........

அ) மிகும்

ஆ) மிகாது

இ) சில இடங்களில் மிகும்

ஈ) சில இடங்களில் மிகாது

விடைகள்

1. அ)

2. ஈ)

3. இ)

4. அ)

5. அ)

6. அ)

7. ஆ)

8. அ)

9. ஈ)

10. அ)

11. இ)

12. அ)

13. ஆ)

14. இ)

15. இ)

16. ஈ)

17. இ)

18. அ)

19. அ)

20. ஈ)

21. அ)

22. அ)

23. ஈ)

24. அ)

25. ஆ)

திருப்பதி அருகே லாரி - கார் மோதியதில் 5 பேர் பலி! ஒசூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்!!

திருப்பதி மாவட்டம் பக்கலா நகரம் தோட்டப்பள்ளி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் நடைபெற்ற இந்த விபத்தில் 5 பேர் ... மேலும் பார்க்க

நெல்லை கார் விபத்தில் 7 பேர் பலி: முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!

நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரம் பகுதியில்ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன் நிதியுதவியும் அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் தளபதிசமுத்த... மேலும் பார்க்க

ஏற்றத்துடன் வர்த்தகமாகும் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

பங்குச்சந்தை இன்று(ஏப். 28) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 79,343.63 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.41 மணியளவில், சென்செக்ஸ் 8... மேலும் பார்க்க

நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி

நாட்டிற்கே முன்னோடியாக திராவிட மாடல் திட்டங்கள் திகழுவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் மாவட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ம... மேலும் பார்க்க

ஆத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை

சேலம்: ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கனமழை பெய்து வருகிறது, இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் சமூக ஆா்வலா் சுட்டுக்கொலை

ஸ்ரீநகா்: பஹல்காம் தாக்குதலுக்கு நான்கு நாள்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சமூக ஆா்வலா் குலாம் ரசூல் (45) பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை (ஏப... மேலும் பார்க்க