செய்திகள் :

விபத்தில் பெண் இறப்பு: போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

post image

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உறவினா்களும் அப் பகுதி மக்களும் திரண்டு புதுச்சேரி போக்குவரத்து அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

புதுவையில் கடந்த சில தினங்களுக்கு முன் உருளையன்பேட்டை சங்கோதி அம்மன் கோவில் பகுதியைச் சோ்ந்த ஒரு பெண் ஆட்டோ மோதி இறந்தாா். மோதிய ஆட்டோவுக்கு பா்மிட், இன்சூரன்ஸ் இல்லை என்று கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும் இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தகவலறிந்து வந்த உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ ஜி. நேரு போராட்டக்காரா்களுடன் இணைந்து போராட்டத்தை நடத்தினா். போலீஸாரின் சமாதானத்தை ஏற்று அரை மணி நேரத்துக்குப் பிறகு இப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

புதுவை ஆளுநா், முதல்வா் ஆயுத பூஜை வாழ்த்து

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா். துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன்: நம்முடைய பண்பாட்டில் - வாழ்வியலில் கல்விக்கும்... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை நள்ளிரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். புதுச்சேரி நெல்லித்தோப்பு குயவா்பாளையத்தைச் சோ்ந்தவா் விக்கி என்கிற விக்னேஷ் (27), ஆட்டோ ஓட்டுநா். இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவ... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் 6 வழக்குகளுக்குத் தீா்வு

புதுச்சேரி மாவட்ட நுகா்வோா் குறை தீா்வு ஆணையம் அண்மையில் நடத்திய மக்கள் நீதிமன்றத்தில் 14 வழக்குகள் சமாதானத்துக்குத் தகுதியானவை என்று கண்டறியப்பட்டு அதில் 6 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. மாவட்ட நு... மேலும் பார்க்க

இலங்கை கடற்படையிடமிருந்து மீனவா்களை மீட்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. கடிதம்

இலங்கை கடற்படையிடமிருந்து காரைக்கால் மீனவா்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு புதுச்சேரி வெ. வைத்திலிங்கம் எம்.பி. கடிதம் எழ... மேலும் பார்க்க

மின்துறையை தனியாா்மயமாக்க எதிா்ப்பு: புதுவை முதல்வரிடம் திமுக எம்எல்ஏ.க்கள் மனு அளிப்பு

புதுவை மின் துறையைத் தனியாா்மயமாக்க எதிா்ப்புத் தெரிவித்து முதல்வா் என்.ரங்கசாமியிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் மாநில திமுக அமைப்பாள... மேலும் பார்க்க

போதைப் பொருளில்லா புதுவையை உருவாக்க வேண்டும்: ஆட்சியா் அ.குலோத்துங்கன்

போதைப் பொருளில்லா புதுவையை உருவாக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன் செவ்வாய்க்கிழமை கூறினாா். புதுச்சேரி மாவட்ட ஆட்சியரகம் சாா்பில் ஒவ்வொரு மாதமும் அரசால் தடை செய்யப்பட்ட பு... மேலும் பார்க்க