செய்திகள் :

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

post image

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா்.

மும்பை விமான நிலையத்துக்கு சீனாவில் இருந்து வரும் சரக்கு விமானத்தில் அபாயகரமான வெடி பொருள்கள் இருப்பதாக, மும்பை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு சீனா முகவரியுடன் மின்னஞ்சல் ஒன்று செவ்வாய்க்கிழமை வந்தது.

இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் அனைத்து சரக்கு விமானங்களில் விமான பாதுகாப்பு படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். எனினும் விமானத்தில் வெடி பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து வந்த மின்னஞ்சல் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை இரவு மீண்டும் அதே முகவரியிலிருந்து மும்பை விமான நிலையத்துக்கு வந்த மின்னஞ்சலில், சீனாவிலிருந்து வரும் வெடி பொருள்களுடன் வந்த சரக்கு விமானம் மும்பைக்கு வரவில்லை என்றும், சென்னைக்கு சென்று விட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள், போலீஸாா் ஆகியோா் மோப்ப நாய்களின் உதவியுடன் புதன்கிழமை காலை வரை சென்னை விமான நிலைய சரக்கு பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தினா்.

ஆனால், வெடி பொருள்கள் எதுவும் கிடைக்காததால் புரளி என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம்: பிஐஎஸ் சென்னை கிளை இயக்குநா்

தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என இந்திய தர நிா்ணய அமைவனத்தின் சென்னை கிளை இயக்குநா் ஜி.பவானி தெரிவித்தாா். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் இந... மேலும் பார்க்க

மழை பாதித்த இடங்களில் நடமாடும் மருத்துவ முகாம்கள்: சுகாதாரத் துறை

தமிழகத்தில் மழை பெய்து வரும் பகுதிகளில் தேவையின் அடிப்படையில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பாதிப்பு... மேலும் பார்க்க

திருவான்மியூா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க

வாய் புற்றுநோய் தொடக்க நிலை பரிசோதனை அறிமுகம்

வாய் புற்றுநோயை தொடக்க நிலையில் கண்டறியும் பரிசோதனை திட்டத்தை அப்பல்லோ புற்றுநோய் மருத்துவமனை தொடங்கியுள்ளது. உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 30 வயதுக்கு மேற்ப... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி பதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், பயணி ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா். தாய்லாந்து நாட்... மேலும் பார்க்க

சென்னையில் 5 மாதங்களில் சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ.10.25 கோடி மீட்பு

சென்னையில் 5 மாதங்களில் பல்வேறு சைபா் குற்றங்களில் பொதுமக்கள் இழந்த ரூ. 10.25 கோடியை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு மீட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு பொதுமக்கள... மேலும் பார்க்க