செய்திகள் :

விமானப் படையின் மகா கும்பமேளா இது: விமான கண்காட்சியை துவக்கி வைத்த ராஜ்நாத்!

post image

பெங்களூருவில் ஏரோ இந்தியா - 2025 விமான சாகச நிகழ்ச்சி மற்றும் கண்காட்சியை இன்று (பிப்.10) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தார்.

ஏரோ இந்தியா கண்காட்சியில் வெளிநாடுகளைச் சோ்ந்த 150 நிறுவனங்கள் உள்பட 900-க்கும் மேற்பட்ட விமானத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்ச்சியை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பாதுகாப்பு உற்பத்தி துறையின் பாதுகாப்பு கண்காட்சி நிறுவனம் நடத்துகிறது.

வரலாற்றில் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களான ரஷியாவின் எஸ்யு-57 மற்றும் அமெரிக்காவின் எஃப்-35 ஆகியவை பங்கேற்கின்றன.

இதையும் படிக்க: கும்பமேளாவில் அலைமோதும் கூட்டம்! ரயில் என்ஜினில் ஏறிய பயணிகளால் பரபரப்பு!

இந்நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “நிச்சயமற்ற இவ்வுலகில் இந்திய மண்ணின் வலிமையையும் மீள்திறனையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்துவதால் இது மகா கும்பமேளாவைப் போன்றது.” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “இந்தியாவில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஏரோ இந்தியா வடிவில் மற்றொரு கும்பமேளா வெளிவருகிறது. பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் சுயமரியாதை கும்பமேளா ஒரு பக்கம், ஏரோ இந்தியாவின் ஆராய்ச்சி கும்பமேளா மறுபக்கம்.

பிரயாக்ராஜ் கும்பமேளா உட்புறத்தை வலுப்படுத்தவதில் கவனம் செலுத்துகிறது, ஏரோ இந்தியா கும்பமேளா வெளிப்புறத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

பிரயாக்ராஜ் இந்தியாவின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் வெளிபடுத்துகிறது, ஏரோ இந்தியா இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது.

ஒரு புறம் பாரம்பரியம், ஆன்மிகத்தின் மகாகும்பமேளா, மறுபுறம் ஆயுதம் மற்றும் தைரியத்தின் மகா கும்பமேளா நடைபெறுகிறது.” என்றார்.

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற... மேலும் பார்க்க

அதிரடி உயர்வு! வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(பிப். 11) சவரனுக்கு ரூ. 640 அதிரடியாக உயர்ந்து, சவரன் ரூ. 64,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம் விலை அதிரடி உயர்வுஅமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியே... மேலும் பார்க்க

தமிழ்நிலக் கடவுளைப் போற்றுவோம்: விஜய் வாழ்த்து!

தமிழ்நிலக் கடவுளைப் போற்றுவோம் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது பற்றி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும்... மேலும் பார்க்க

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்!

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன நிகழ்ச்சி இன்று(பிப். 11) காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.ஜீவ காருண்யத்தை உலகு... மேலும் பார்க்க

தைப்பூசம்: முருகன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்!

தைப்பூசத் திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் இன்று(பிப். 11) அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி பழன... மேலும் பார்க்க

வேதங்களின்படி அம்பேத்கா் பிராமணா்! நடிகா் கருத்தால் சா்ச்சை!

‘அறிவை வளா்த்துக் கொள்ளும் திறனுடைய அனைவருமே பிராமணா்கள் என்று வேதம் கூறியுள்ளது; அந்த வகையில் அம்பேத்கா் பிராமணா்’ என்று மராத்திய நடிகா் ராகுல் சோலாபுா்கா் கூறியுள்ளது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது... மேலும் பார்க்க