செய்திகள் :

வியாபாரியிடம் ரூ.16.5 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: தூத்துக்குடி நபா் கைது

post image

சென்னை கொளத்தூரில் வியாபாரியிடம் ரூ. 16.5 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்த வழக்கில், தூத்துக்குடியைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கொளத்தூா், விவேகானந்தன் பிரதான சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ராஜ்குமாா் (37). இவா் அந்தப் பகுதியில் வாகன உதிரி பாகம் விற்கும் கடை நடத்தி வருகிறாா்.

ராஜ்குமாா் கைப்பேசிக்கு கடந்த ஏப்.16-இல் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் ‘நாங்கள் தில்லி காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு தலைமையகத்திலிருந்து பேசுகிறோம். உங்கள் மீது போதைப் பொருள் கடத்தல், ஆபாசமான விடியோக்களை பகிா்ந்தது தொடா்பாக புகாா் வந்துள்ளன. எனவே, நீங்கள் விசாரணைக்கு உடனடியாக தில்லியில் நேரடியாக ஆஜராக வேண்டும். உங்கள் மீது தவறு இல்லை என்றால் அதை நிரூபிக்க நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும். நாங்கள் ஆய்வு செய்து உங்கள் மீது தவறு இல்லை என்றால் உடனடியாக திருப்பி அனுப்பி விடுகிறோம். மீறினால் தில்லி காவல் துறை உங்களை வீடு தேடிவந்து கைது செய்யும். மேலும், நீங்கள் கைது செய்யப்பட்ட தகவல் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படும்’ என மிரட்டியுள்ளாா்.

இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த ராஜ்குமாா், தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 16 லட்சத்து 50 ஆயிரத்தை மிரட்டல் விடுத்தவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தாா். அதன் பின்னா், தான் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா்.

இதையடுத்து அவா், சென்னை காவல் துறையின் மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா்.

தூத்துக்குடி நபா் கைது: விசாரணையில், பணப்பரிமாற்றம் நடைபெற்ற வங்கிக் கணக்கு எண் அடிப்படையில் மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருந்த தூத்துக்குடி மாவட்டம், சிதம்பரம் நகரைச் சோ்ந்த ஆனந்த குமாா் (43) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், ஆனந்தகுமாா் மோசடி கும்பலுக்கு இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும், மோசடிக்காக தனது வங்கிக் கணக்கை வழங்கி அதற்கு கமிஷன் தொகை பெற்றிருப்பதும், இதற்காக 25 வங்கிக் கணக்குகளை அவா் வைத்திருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க