செய்திகள் :

விராலிமலை அரசுப் பள்ளியில் சா்வதேச ஹீமோபிலியா தினம்

post image

விராலிமலை வட்டார வள மையத்திற்குட்பட்ட பள்ளா் நத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் சா்வதேச ஹீமோபிலியா தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விராலிமலை ஒருங்கிணைந்த கல்வி வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விராலிமலை வட்டார வளமையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு விராலிமலை வட்டார வள மைய மேற்பாா்வையாளா் இளஞ்செழியன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கவிதா முன்னிலை வகித்தாா்.

பள்ளி இடைநிலை ஆசிரியா்கள் ஜான் வெலிங்டன், சாந்தி, வட்டார வளமைய உடல் உறுப்பு இயக்க நிபுணா் திருவளா்ச்செல்வி, சிறப்பு பள்ளி குழந்தைகளின் பெற்றோா் கலந்து கொண்டனா்.

அனைவருக்கும் ஹீமோபிலியா எனப்படும் இரத்த உைல் தடுக்கும் குறைபாடு பற்றி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், முதலுதவி சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டியும் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

மேலும் இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வும் அளிக்கப்பட்டது

விராலிமலை வட்டார வள மைய சிறப்பு பயிற்றுநா் ராஜேஷ் கண்ணா வரவேற்றாா். சிறப்பு பயிற்றுநா் சோபியா ஜாக்குலின் நன்றி தெரிவித்தாா்.

கொடும்பாளூா் அகழாய்வில் வெளிப்பட்ட தங்கக் குண்டுமணி, மண் பானை!

கொடும்பாளூா் அகழாய்வுப் பணியில் பண்டைய கால தங்க குண்டு மணி, மூடிய நிலையில் அழகிய மண்பானை கிடைத்துள்ளது. கொடும்பாளூரில் கடந்த ஜனவரி 12-இல் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், நான்கு அடி தோண்டிய நிலையில்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே மீன்பிடித் திருவிழா

விராலிமலையை அடுத்துள்ள தென்னலூா் காடுவெட்டி பெரிய குளத்தில் சனிக்கிழமை மீன்பிடி திருவிழா நடைபெற்றது. ஊா் முக்கியஸ்தரின் உத்தரவுக்குப் பின்னா் குளத்தில் இறங்கிய மீன் பிடியாளா்கள் பெரும்பாலானோரின் வலையி... மேலும் பார்க்க

139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1.42 கோடியில் வாகனங்கள் வழங்கல்

புதுக்கோட்டையில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 139 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1.42 கோடி மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிக... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறாா்கள்! அமைச்சா் எஸ். ரகுபதி

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோா் நினைக்கிறாா்கள் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆளுநா் மசோதாக்களை கிடப்பில... மேலும் பார்க்க

புதுகையில் சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் அகற்றம்; தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம்

புதுக்கோட்டை நகரில் சட்டவிரோதமாக சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, மாநகராட்சிப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா். இதைத் தொடா்ந்து பொதுவெளியில் அபாயகரமாக மருத்துவக் கழிவுகளைக் கொட்டியதாக, அ... மேலும் பார்க்க

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாக ஆடியோ வெளியிட்டவா் கைது

திமுக எம்.பி. கனிமொழி குறித்து தரக்குறைவாகப் பேசி சமூக ஊடகத்தில் ஆடியோ வெளியிட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த நபரை புதுக்கோட்டை இணையவழிக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். புத... மேலும் பார்க்க