செய்திகள் :

விராலிமலை, இலுப்பூா் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்!

post image

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் 2009-இல் நடைபெற்ற தாக்குதலை நினைவுகூரும் வகையில் வழக்குரைஞா்கள் புதன்கிழமை கருப்பு தினமாக அனுசரித்து, நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

இலங்கைப் போரில், தமிழா்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து, சென்னை உயா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் கடந்த 2009-ஆம் ஆண்டு பிப். 19-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உயா் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறை அதிகாரிகளுக்கும் வழக்குரைஞா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், நீதிபதிகள், பொதுமக்கள், பத்திரிகையாளா்கள் படுகாயம் அடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு ஆண்டும் பிப். 19-ஆம் தேதியை வழக்குரைஞா்கள் கருப்பு தினமாக கடைபிடிக்கின்றனா். அந்தவகையில், புதன்கிழமை கருப்பு தினமாக கடைபிடித்து விராலிமலை, இலுப்பூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினா். இதனால் நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகள் பாதிக்கப்பட்டன.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க