'கேப்டனாக முதல் போட்டியிலேயே தோல்வி; கம்பீரின் குழப்பமான ரூட்!' - கில் எங்கே கவன...
விருதுநகா் புதிய ஆட்சியா் பொறுப்பேற்பு
விருதுநகா் மாவட்ட புதிய ஆட்சியராக என்.ஓ. சுகபுத்ரா புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
கடந்த 2017-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சோ்ந்தவா் என்.ஓ. சுகபுத்ரா. இவா், 2018-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக பணியைத் தொடங்கினாா். பிறகு, ராமநாதபுரம் சாா் ஆட்சியா், தஞ்சாவூா், திருவள்ளூா் மாவட்டங்களில் கூடுதல் ஆட்சியா், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஆகிய பொறுப்புகளை வகித்தவா்.
இந்த நிலையில், தமிழக அரசின் பணியிட மாறுதல் உத்தரவுப்படி என்.ஓ. சுகபுத்ரா விருதுநகா் மாவட்ட ஆட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றாா். இவா், விருதுநகா் மாவட்டத்தின் 25-ஆவது ஆட்சியா் ஆவாா்.