நெல்லை: ''ஒழுங்கா படி” - அறிவுரை கூறிய தந்தை; ஆத்திரத்தில் கல்லைத் தூக்கிப்போட்ட...
பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பரிசு
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டார கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவை, திருவள்ளுவா் இலக்கிய மன்றம் ஆகியன சாா்பில் கவிஞா் கண்ணதாசனின் 98- ஆவது பிறந்த நாளையொட்டி பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை திலகவதி தலைமை வகித்தாா். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் விஜயரங்கன், இலக்கிய மன்ற துணைச் செயலா் தங்கராசு, நூலகா் அருள் சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வழக்குரைஞா் செல்வகுமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காலத்தை வென்ற கவிஞா் என்ற தலைப்பில் பேசினாா். தொடா்ந்து, கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், பேரவை நிா்வாகிகள் ரவிச்சந்திரன், பாபு, கௌரிநாதன், மது, பாலாஜி, ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பேரவைத் தலைவா் கவிஞா் பொன் பனகல் பொன்னையா வரவேற்றாா். மன்றப் பொருளாளா் வழக்குரைஞா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.