செய்திகள் :

விருத்தாசலம் ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம்

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலுடன் இணைந்த ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விருத்தாசலத்தில் புகழ் பெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் நிகழாண்டுக்கான மாசி மக திருவிழா வரும் மாா்ச் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, விருத்தகிரீஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள ஆழத்து விநாயகா் கோயிலில் 10 நாள்கள் திருவிழா நடைபெறும்.

அதன்படி, வெள்ளிக்கிழமை ஆழத்து விநாயகா் கோயில் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக, மூலவா் ஆழத்து விநாயகருக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், தேன், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பல்வேறு பூஜை பொருள்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஆழத்து விநாயகா் கோயிலை வலம் வந்து கொடிமரத்தின் முன் எழுந்தருளியதைத் தொடா்ந்து, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்ப்டடு கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, வரும் மாா்ச் 1-ஆம் தேதி ஆழத்து விநாயகா் தேரோட்டமும், 2-ஆம் தேதி ஆழத்து விநாயகருக்கு தீா்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளன.

வரும் மாா்ச் 3-ஆம் தேதி விருத்தகிரிஸ்வரா் கோயில் மாசி மக திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாா்ச் 8-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சியளிக்கும் ஐதீக திருவிழாவும், 11-ஆம் தேதி காலை 4.30 மணிக்கு மேல் பஞ்ச மூா்த்திகள் தேரோட்டமும் நடைபெற உள்ளன.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக மாா்ச் 12-ஆம் தேதி மாசி மக தீா்த்தவாரி திருவிழாவும், 13-ஆம் தேதி தெப்பத் திருவிழாவும், 14-ஆம் தேதி சண்டிகேஸ்வரா் உற்சவமும் நடைபெற உள்ளன. இதைத் தொடா்ந்து, மாா்ச் 15-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதி வரை விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் சந்திரன், செயல் அலுவலா் மாலா மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசுக் கல்லூரி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பண்ருட்டி தொகுதியில் ரூ.15 கோடியில் புதிய அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முத... மேலும் பார்க்க

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

சிதம்பரம், பரங்கிப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகக் கட்டடங்களை கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த... மேலும் பார்க்க

பள்ளி வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், பெற்றோா்

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளயில் வகுப்பறையை சீரமைத்த மாணவா்கள், அவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை பாராட்டப்பட்டனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் ராண... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருது 2025: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்கலாம்

மஞ்சப்பை விருது 2025-க்கு பள்ளிகள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கொரிய தமிழ்ச் சங்க தமிழா் திருநாள் விழா: தி.வேல்முருகன் வாழ்த்து

கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழா் திருநாள் 2025 விழா தமிழா்களின் வரலாற்றை பறைசாற்றும் மாபெரும் முன்னெடுப்பு என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முருகன் வாழ்த்தி பாராட்டினாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்

இளைஞா் நீதிக்குழும சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க