செய்திகள் :

விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்

post image

சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், கட்சிரோலி பகுதியில் இருந்து நக்ஸல் ஆதரவாளா் என்று கூறப்படும் கைலாஷ் ராம்சந்தானி என்பவா் கைது செய்யப்பட்டாா்.

அவா் ஜாமீன் கோரி, மும்பை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘நான் 2019-ஆம் ஆண்டுமுதல் சிறையில் உள்ளேன். என் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. ஆனால் இந்த வழக்கில் என்னுடன் சோ்த்து குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. எனக்கும் ஜாமீன் அளிக்க வேண்டும்’ என்று கோரினாா்.

அவரின் ஜாமீன் மனுவை உயா்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவா் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘சிறப்பு சட்டங்களின் கீழ் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடைபெறும்போது, அதற்கென பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை மத்திய அல்லது மாநில அரசுகள் அமைப்பது மிக முக்கியம் என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது. விரைவான விசாரணையை உறுதி செய்ய போதிய உள்கட்டமைப்புடன் அந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் கருத்தாகும். இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது. வழக்கின் அடுத்த விசாரணை மே 23-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு: 93.66% தேர்ச்சி!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட நிலையில், மொத்தம் 93.66 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியவில்லை!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரி... மேலும் பார்க்க

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் பலி!

பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் மஜிதா பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனைக் குடித்... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

புது தில்லி: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின. 93.66 சதவீத மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் பயின... மேலும் பார்க்க

எல்லையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு -காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று(செவ்வாய்கிழமை) காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பஹல்காம் தாக்குதலைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முக... மேலும் பார்க்க

ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படைத் தளத்திற்குப் பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி விமானப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. பிரதமர் மோடி இன்று அதிகாலையில் ... மேலும் பார்க்க