செய்திகள் :

விரைவில் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹானர் ஸ்மார்ட்போன்!

post image

புதுதில்லி: சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹானரின் பிராண்ட் பார்ட்னரான பி.எஸ்.ஏ.வி. குளோபல் (PSAV Global), அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பதற்காக மின்னணு ஒப்பந்த உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாக தெரிவித்தது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டும் ஹானர் ஸ்மார்ட்போன்கள் மூலம் ஆண்டிற்கு 1 சதவிகித சந்தைப் பங்கைப் பெற நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் விளைவாக சுமார் ரூ.2,500 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளதாகவும் பிஎஸ்ஏவி குளோபல் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சி. பி. கண்டேல்வால் தெரிவித்தார்.

உற்பத்தி தொடங்கிய பிறகு, எங்கள் இலக்கு தோராயமாக 1 சதவிகித சந்தைப் பங்கை அடைவதாகும். இது சுமார் ரூ.2,500 கோடி வருவாயாக இருக்கும். உற்பத்தி நடவடிக்கைகளின் முதல் வருடத்திற்குள் இந்த இலக்கு அடையப்படும்.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான உலகளாவிய மொபைல் போன் விநியோகங்கள் குறித்த கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி அறிக்கையின்படி, முதல் 5 பிராண்டுகளைத் தவிர, ஹானர் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டுகளில் ஒன்றாகும் என்றது.

ஹானர் ஏற்கனவே ஹானர் X9c ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, அதைத் தொடர்ந்து இந்த மாதம் ஹானர் X7c ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

நிறுவனம் இப்போது ஹானர் V3 மற்றும் ஹானர் மேஜிக் 7 ப்ரோவை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

இதையும் படிக்க: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!

PSAV Global, the brand partner of Chinese smartphone company Honor, is in talks with electronic contract manufacturers to make devices in India

தங்கம் விலை மீண்டும் ரூ. 75 ஆயிரத்தை கடந்தது!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 75,000 -ஐ கடந்துள்ளது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்க நகைகளை வாங்க மக்கள் முனைப்பு காட்டும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 280 உயர்ந்துள்ளது.... மேலும் பார்க்க

ஜியோமி பேட்டரிகளுக்கு 50% தள்ளுபடி! 4 நாள்கள் மட்டுமே...

ஜியோமி, ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பேட்டரிகளுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று ஜியோமி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.சீனாவை தலைமையிடமாகக் கொண்ட ஜியோமி, இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறு... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

ஜம்முவில் பெய்தும் வரும் கனமழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.தொடர் மழையால் பாதி மூழ்கிய நிலையிலுள்ள கோயில்.தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள பகுதியளவு கட்டமைப்புகள்.கனமழையால் தாவி நதியில் ஏற்பட்ட... மேலும் பார்க்க

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

புதுதில்லி: மொத்த விற்பனையாளர்கள், சிறு மற்றும் பெரிய சங்கிலி சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கான கோதுமை இருப்பு வரம்பு விதிமுறைகளை மத்திய அரசு இன்று முதல் மேலும் கடுமையாக்கியுள்ளத... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: திருப்பூர், நொய்டா, சூரத்தில் உற்பத்தி நிறுத்தம்!

புது தில்லி: இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்காவின் அதிக வரி குறித்து 'எஃப்ஐஇஓ' (FIEO) கடும் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. மோசமடைந்து வரும் செலவு, போட்டித்தன்மையின் காரணமாக திருப்பூர், நொய்டா மற்றும் ... மேலும் பார்க்க

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய இயர் பட்ஸ் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது. ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ் 3டி ஆடியோவை வழங்கும் வகையில், 360 டிகிரி கோணத்திலும் ஒலியலைகளை கேட்கும் அனுபவத்தை பயனர்களுக்... மேலும் பார்க்க