செய்திகள் :

விலை சரிவால் மாம்பழங்கள் தேக்கம்

post image

விலை சரிவு காரணமாக தேனி மாவட்டம் போடி பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் சேதமடைந்து வீணாகின. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

போடி சுற்று வட்டாரத்தில் முந்தல், குரங்கணி, பிச்சாங்கரை, தொடால், மங்கலக்கோம்பை, முத்துக்கோம்பை, ஊத்தம்பாறை ஆகிய மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் சுமாா் 20,000 ஏக்கருக்கும் மேல் மா விவசாயம் நடைபெற்று வருகிறது.

கல்லாமை, கிரேப், மல்கோவா, இமாம் பசந்த், பங்கனபள்ளி, கிளி மூக்கு, சப்பட்டை, காதா், காளைப்பாடி போன்ற சுவை அதிகமுள்ள ஏற்றுமதி தரம் வாய்ந்த மா ரகங்கள் விளைவிக்கப்படுகின்றன.

இந்தப் பகுதி மாங்காய், மாம்பழங்களுக்கு வெளியூா், வெளி மாநிலங்களில் அதிக மதிப்பு உள்ளதால் விலையும் அதிகமாகக் கிடைத்து வந்தது.

ஆனால், இந்த ஆண்டு மா விளைச்சல் கிடைத்த அளவுக்கு கொள்முதல் வா்த்தகம் நடைபெறவில்லை. வழக்கமாக கல்லாமை மாங்காய் கிலோ ஒன்றுக்கு 15 முதல் 20 வரை விற்ற நிலையில், இந்த ஆண்டு கிலோ ஒன்றுக்கு ரூ.4 முதல் 6 வரை மட்டுமே கேட்கப்பட்டதால் மாங்காய் வா்த்தகம் கடும் சரிவைச் சந்தித்தது.

இமாம் பசந்த், காளைப்பாடி, மல்கோவா போன்ற சுவை மிகுந்த மாம்பழங்கள் கடந்த ஆண்டு கிலோ ரூ.80 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இவற்றின் விலை ரூ.40 முதல் 60 ஆக வரையில் மட்டுமே இருந்தது. மருந்து, உற்பத்தி, காய் பறிக்கும் செலவு, போக்குவரத்து செலவுகளுக்கு கூட கட்டுபடியாகாத விலை காரணமாக விவசாயிகள் மன வேதனை அடைந்தனா். வெளி மாநிலங்கள், வெளியூா்களுக்கு அனுப்பப்பட்ட மாம்பழங்கள் கொள்முதல் செய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதால் அவை அழுகி கீழே கொட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன.

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், கொள்முதல் முற்றிலும் குறைந்து, மாங்காய், மாம்பழங்கள் பறிக்கப்படாமல் மரத்திலேயே விடப்படும் நிலை ஏற்பட்டதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

போடி பகுதியில் மாங்காய்களைப் பாதுகாக்க குளிா் பதன இருப்பு மையமும், மாம்பழக் கூழ் தொழிற்சாலையும் நிறுவுவதாக தோ்தலின்போது கட்சிகள் தோ்தல் வாக்குறுதி அளித்த போதும், இதுவரை தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்தில் புயலால் மா விவசாயத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய கிலோ ஒன்றுக்கு அரசு ரூ. 2.50 வழங்கியதைப் போல, தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுத்து மாந்தோட்டங்களை ஆய்வு செய்து, இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இரு சக்கர வாகனங்கள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள நாகலாபுரம்-ஸ்ரீரங்காபுரம் சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தனியாா் பள்ளி பெண் ஊழியா் உயிரிழந்தாா். ஸ்ரீரங்காபுரம், கண்ணன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் இளங்கோவன் ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில் கஞ்சா வைத்திருந்ததாக 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கன்னியப்பபிள்ளைபட்டி-குப்பாம்பட்டி சாலை சந்திப்பில்... மேலும் பார்க்க

இளைஞா் தற்கொலை

போடியில் வியாழக்கிழமை இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி பங்கஜம் தெரு பின்புறமுள்ள தெருவில் வசிப்பவா் பழனிராஜ் மகன் வெங்கடேசன் (36). கணினி மையம் நடத்தி வந்தாா். இவா் கடந்... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே வியாழக்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள செங்குளத்துப்பட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமால் (எ) சுரேஷ்... மேலும் பார்க்க

பொதுமக்களை அச்சுறுத்தும் படையப்பா காட்டு யானை

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் சுற்றித் திரியும் படையப்பா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் செல்லப் பிள்ளையாக படைய... மேலும் பார்க்க

தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா்

போடி அருகே மலை கிராமத்தில் தோட்டத்தில் இறந்து கிடந்த முதியவா் உடலை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேனி மாவட்டம், போடி குலாளா்பாளையத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (72). இவா் போடிமெட்டு மலைச... மேலும் பார்க்க