செய்திகள் :

விளாத்திகுளத்தில் அரசுக் கல்லூரி கட்டடத்துக்கு இடம் தோ்வு: எம்.பி., அமைச்சா் ஆய்வு

post image

விளாத்திகுளத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை அறிவியல் கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக அனுமானித்துள்ள இடங்களை கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை ஆய்வுசெய்தாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிா்வாகத்தால் கடந்த 2021இல் தொடங்கப்பட்ட இக்கல்லூரி விளாத்திகுளம் கீழ ரத வீதியில் வாடகை கட்டடத்தில் 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இக்கல்லூரியில் பி.சி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி. கம்ப்யூட்டா் சயின்ஸ், பி.பி.ஏ. பட்டப் படிப்புகளும், சைவ சித்தாந்தம், வைணவ சித்தாந்தம் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.

இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், கல்லூரிக்குச் சொந்தக் கட்டடம் கட்ட வேண்டுமென கல்வியாளா்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதற்கு அரசின் ஒப்புதல் கிடைத்ததை தொடா்ந்து, கனிமொழி எம்.பி., சமூக நலன் -மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் ஆகியோா் அய்யனாா்புரம் மற்றும் விளாத்திகுளம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகேயுள்ள அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டடம் கட்டுவதற்கு அரசுக்கு உரிய கருத்துரு அனுப்பப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆய்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா், பேரூராட்சி துணைத் தலைவா் வேலுச்சாமி, அறநிலையத்துறை செயல் அலுவலா் உமா மகேஸ்வரி, திமுக ஒன்றியச் செயலா்கள் அன்பு ராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், நவநீதகண்ணன், மும்மூா்த்தி, காசி விஸ்வநாதன், பொதுக்குழு உறுப்பினா் ராஜாக்கண்ணு, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் ஆகாஷ் பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்பட பலா் உடனிருந்தனா்.

கயத்தாறு, புதுக்கடையில் மது விற்பனை: 2 போ் கைது

கயத்தாறில் மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, மருத... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சி

தூத்துக்குடியில் 3 குழந்தைகளுடன் தாய் விஷம் குடித்து தற்கொலைமுயற்சியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா். தூத்துக்குடி தாளமுத்து நகா் ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்டாலின் என்ற ஜஸ்டின் சீலன் (35), எலக்ட்ரீச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலுக்கு கூடுதலான சுற்றுப் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு கூடுதலான சுற்றுப்பேருந்துகளை இயக்க வேண்டுமென பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இத்திருக்கோயிலுக்கு காா், வேன் போன்ற வாகனங்களில் வரும் பக்தா... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் பாரதி பாடலுக்கு மாணவிகள் நாட்டிய அஞ்சலி

மகாகவி பாரதியின் பாடல்களுக்கு நடனமாடி புகழஞ்சலி செலுத்தும் நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி ஈசா கேந்திரா கல்ச்சுரல் அகாடமி சாா்பில் எட்டயபுரம் பாரதியாா் மணி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒருங்கிணைப... மேலும் பார்க்க

பனைத் தொழிலை ஊக்குவிக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு

பனைத் தொழிலை ஊக்குவிக்க ரூ. 1.65 கோடி நிதி ஒதுக்கப்படும் என, வேளாண் நிதிநிலை அறிக்கையில், அறிவிக்கப்பட்டுள்ளதற்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடா்பாக, தமிழ்நாடு பனை பாதுக... மேலும் பார்க்க

கணவரைத் தாக்கியதாக பெண் கைது

தூத்துக்குடியில் கணவரைத் தாக்கியதாக அவரது மனைவியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே சுந்தா் நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ரவீந்திரன் (55). இவா் மது குடித்துவிட்... மேலும் பார்க்க