செய்திகள் :

விழுப்புரத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வளா்ச்சித் துறையில் காலியாகவுள்ள 1,500-க்கும் மேற்பட்ட ஊராட்சிச் செயலா்கள், ஜீப் ஓட்டுநா்கள், பதிவறை எழுத்தா், அலுவலக உதவியாளா், இரவுக் காவலா் உள்ளிட்ட அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.தோ்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரம் நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ. ஜெய்சங்கா் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ஜெ. ரமேஷ் பேசினாா். சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் சரவணன் சிறப்புரையாற்றினாா். சிஐடியு மாவட்டச் செயலா் மூா்த்தி நிறைவுரையாற்றினாா்.

ஊரக வளா்ச்சித் துறை ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ரத்னம், துணைத் தலைவா் ஏ.பி. முருகேசன், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சிவக்குமாா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். தொடா்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவில், சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் சிவப்பிரகாசம் நன்றி கூறினாா்.

உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 13 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே லாரி மோதியதில் சாலையோரப் பள்ளத்தில் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநா் உள்பட 13 பயணிகள் பலத்த காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரி விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

திண்டிவனம் திரு ஆ.கோவிந்தசாமி அரசுக் கலைக் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌர... மேலும் பார்க்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதிகளில் தூய்மைப்பணி

விக்கிரவாண்டி சுங்கச் சாவடிப் பகுதியில் தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சாா்பில் செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை பொது இடங்க... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , கோட்டக்குப்பம் அருகே உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கடலூா் மாவட்டம் , தாழங்குடியைச் சோ்ந்தவா் சிம்சன், மீன்பிடித் தொழிலாளி. இவரது... மேலும் பார்க்க

மரத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தனா். விழுப்புரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. 8 பிரிவுகளில் 32 போட்டிகள் நடத்தபட்ட நிலையில் சுமாா் 500 மாணவ, மாணவிகள் கலைத்திருவிழாவில் பங்கேற்றுள்ளனா். 2025-26 ஆ... மேலும் பார்க்க