செய்திகள் :

விழுப்புரத்தில் கைப்பேசி விற்பனையகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு!

post image

விழுப்புரம் கிழக்கு பாண்டிச் சாலையிலுள்ள தனியார் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையிலுள்ள ரெட்டியார்மில் பகுதியில் கைப்பேசி விற்பனை மற்றும் பழுது நீக்கும் மையம் நடத்தி வருபவர் அ. ஜாகீர் உசேன், இவரது கடைக்கு புதன்கிழமை காலை வந்த விழுப்புரம் மகாராஜபுரத்தைச் சேர்ந்த அருண் (20) வந்து, தனது கைப்பேசியைப் பழுது நீக்கித் தருமாறு கூறினாராம். இதற்கு ரூ.200 ஆகும் பணத்தை தந்தால் தான் சரிபார்த்துத் தர முடியும் எனக் கூறினாராம். என்னிடமே பணம் கேட்கிறாயே எனக் கூறிவிட்டு அருண் சென்றாராம்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை விற்பனையகத்தை ஜாகீர் உசேன் திறந்து வைத்துவிட்டு, வெளியே சென்றார். அப்போது ஜாகீர் உசேனின் தம்பி ஷேக் அலாவுதீன் விற்பனையகத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு வந்த அருண், தனது கைப்பேசியைத் தருமாறு கேட்டபோது, என்னிடமே பணம் கேட்கிறாயா எனக் கேட்டு, கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை கடையில் வீசி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். அதிர்ஷ்டவசமாக ஷேக் அலாவுதீன் மீது விழவில்லை. எனினும் கடையிலிருந்த பொருள்கள் சேதமடைந்தன.

தகவலறிந்த விழுப்புரம் ஏஎஸ்பி ரவீந்திர குமார் குப்தா மற்றும் போலீஸார் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண... மேலும் பார்க்க

காகத்தைக் கண்டு பயந்த யானைகள்: வைரல் விடியோ!

தொட்டியில் தண்ணீர் குடிக்கும் போது காகத்தையைக் கண்டு அச்சப்பட்டு யானைகள் பின் வாங்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மீண்டும் தொடங்கிய கோடை வெயிலின் தாக்கத்... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு ரூ. 5,870 கோடி... சென்னை மெட்ரோ முக்கிய ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெர... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டணங்கள்: யுபிஐ மூலம் செலுத்தும் வசதி அறிமுகம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கட்டணங்களை யுபிஐ(UPI) மூலம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒருமுறை பதிவுக்கான கட்டணம், தேர்வுக் கட்டணங்களை யுபிஐ மூலம் இனி செலுத்தலாம்.2025-ம் ஆண்டு ஜனவரி முதல் ம... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ... மேலும் பார்க்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த தங்க மணி!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் ’தங்கத்தால் செய்யப்பட்ட மணி’ கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்... மேலும் பார்க்க