செய்திகள் :

விழுப்புரத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்

post image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மூன்றாவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது ஆண்டு புத்தகத் திருவிழா மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி 12 -ஆம் தேதி வரை நகராட்சித் திடல் பகுதியில் நடைபெறவுள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவுக்காக 50 -க்கும் மேற்பட்ட பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். எம்.பி.துரை. ரவிக்குமார், எம்எல்ஏக்கள் விழுப்புரம் இரா. லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூர் அ.சிவா, உளுந்தூர்பேட்டை ஏ.ஜெ. மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.

ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்த மீனவர்கள்!

வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பொன்முடி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டு, விழாப் பேரூரையாற்றினார்.

இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக் அலி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த புத்தகத் திருவிழாவில் கலை, இலக்கியம், புதினம், நாவல் என பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தலைப்புகளில் ஆளுமைகள் பேச உள்ளனர்.

தொடக்க விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.பிப்ரவரி... மேலும் பார்க்க